சென்னை: அதிமுக நிர்வாகியும் சென்னை மாநகராட்சி ஒப்பந்த தாரருமான வெற்றிவேல் என்பவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலிசார் நேற்று விடிய விடிய 12 மணி நேரத்திற்கும் மேலாக திடீர் அதிரடி சோதனை நடத்தினர்.
இச்சோதனையின்போது ஏறக் குறைய ரூ.13 லட்சம் ரொக்கப் பணம், குத்தகை முறைகேடுகள் தொடர்பான பல்வேறு முக்கிய ஆவ ணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக இந்து தமிழ்திசை ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆவணங்களை முறையாக ஆய்வு செய்த பின்னர், வெற்றி ேவலுக்கு அழைப்பாணை அனுப்பி அவரிடம் மேலும் தீவிர விசாரணை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறை போலிசார் கூறியுள்ளனர்.
சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள வெற்றிவேலுக்கு சொந்தமான வீட்டுடன் இச்சோதனை நடவடிக்கைகள் முடிந்துவிட வில்லை. எம்ஜிஆர் நகர், சூளைப்பள்ளம் இல்லத்தில் வசிக்கும் ெவற்றிவேலின் தந்தை துலுக்கானந்தம் வீட்டிலும் டிஎஸ்பி தலைமையிலான போலிசார் சோதனையைத் தொடர்ந்து வருவதாகவும் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
அதிமுகவின் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் துணைச் செயலாளராக இருந்து வரும் வெற்றிவேல், இதுவரை மாநகராட்சி ஏலக் குத்தகைகள் தொடர்பில் எத்தனை ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளார்? அவற்றில் விதிமுறைகளை மீறி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளாரா? என்பன உள்ளிட்ட சந்தேகங்கள் குறித்தும் சோதனை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக, ரூ.346 கோடி மதிப்பி லான ஏலக் குத்தகை தொடர்பில் வெற்றிவேல் சம்பந்தப்பட்ட ஆவணங்களை வைத்து லஞ்ச ஒழிப்புத் துறை போலிசார் விசாரணைநடத்தி உள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அதிமுக பிரமுகர்களைக் குறி வைத்து சோதனை தொடர்கிறது.
கடந்த ஜூலை மாதம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ் கருக்குச் சொந்தமான 21 இடங் களில் லஞ்ச ஒழிப்புப் போலிசார் அதிரடி சோத னையில் ஈடுபட்டனர்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலிசார் கடந்த 10ஆம் தேதி சோதனை நடத்தினர். இங்கு கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் வெற்றிவேல் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

