கீழடி ஆச்சரியம்: ஒரே குழியில் நான்கு செந்நிறப் பானைகள்

கீழடி ஆச்சரியம்: ஒரே குழியில் நான்கு செந்நிறப் பானைகள்

1 mins read
4adbf035-f5c4-433c-a14e-ee76cf56ab28
கீழடியில் கண்டெடுக்கப்பட்ட செந்நிறப் பானைகள். படம்: ஊடகம் -

சிவ­கங்கை: ஒரே குழி­யில் நான்கு செந்நிறப் பானை­கள் கண்­ட­றி­யப்­பட்­டது கீழ­டி­யில் அக­ழாய்­வில் ஈடு­பட்­டிருக்கும் தொல்­லி­யல் ஆய்­வா­ளர்­களை ஆச்­ச­ரி­யத்­தில் மூழ்­க­டித்­துள்­ளது.

கீழ­டி­யில் இப்­போது ஏழாம் கட்ட அக­ழாய்­வுப்­பணி நடை­பெற்று வரு­கிறது. இது­வரை ஏரா­ள­மான பொருள்­கள் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

பானை, உறை­கி­ண­று­கள், வரி வடிவ பானை ஓடு­கள், சுடு­மண் பகடை, கல் உழவு கருவி, வெள்ளி முத்­திரை நாண­யம் உள்­ளிட்­ட­வை­கள் பண்­டைய காலத் தமி­ழர்­க­ளின் சிறப்பை பறை­சாற்­று­வ­தாக உள்­ளன.

சுமார் 2,600 ஆண்­டு­க­ளுக்கு முற்­பட்ட பொருள்­கள் தொடர்ந்து கிடைத்து வரு­வ­தால், அக­ழாய்­வுப் பணியை உல­கத் தமி­ழர்­களும் கவ­னித்து வரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், கீழ­டி­யில் ஒரே குழி­யில் செந்நிறத்திலான நான்கு சிறிய பானை­கள் அடுத்­த­டுத்து கண்­டெ­டுக்­கப்­பட்­டன. மேலும், கிண்­ணம் போன்ற கறுப்பு, சிவப்பு நிறப் பானை­யும் கிடைத்­துள்­ள­தாக நிபு­ணர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.