சென்னை: திமுக ஆட்சி அமைத்த நூறு நாள்களில் சுமார் 187 ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
எனினும், கோவில் நிலங்களில் குடிசை அமைத்து வாழும் ஏழை மக்களில் ஒருவர்கூட இதுவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படவில்லை என்றும் குழுவாக செயல்படக்கூடியவர்களை கோவில் உள்வாடகைதாரராக ஏற்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் சட்டப்பேரவையில் பேசியபோது அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

