சென்னை: தமிழக கோவில்களில் பணியாற்றி வரும் அர்ச்சகர்கள் யாரையும் நீக்கவில்லை என்றும் அவர்கள் பணியாற்றிய இடத்தில் புதியவர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவ்வாறு எங்கேனும் நடந்திருந்தால் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அவர் தெரிவித்தார்.
'அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்' என்ற சட்டத்தை சீர்குலைக்க சிலர் முயற்சி செய்வதாகவும் முதல்வர் சாடினார்.

