எழுவர் விடுதலை வழக்கு: தள்ளுபடி செய்த நீதிமன்றம்

எழுவர் விடுதலை வழக்கு: தள்ளுபடி செய்த நீதிமன்றம்

1 mins read
e2c854ea-fa83-4a82-8a76-60b7971fb8cd
-

மதுரை: முன்­னாள் பிர­த­மர் ராஜீவ்­காந்தி கொலை வழக்­கில் தண்­டனை அனு­ப­வித்து வரும் ஏழு பேரை விடு­தலை செய்­வது தொடர்­பாக தமி­ழக ஆளு­ந­ரும் இந்­திய அதி­ப­ரும் எடுக்­கும் முடி­வு­க­ளுக்கு காத்­தி­ருப்­ப­தாக தமி­ழக அரசு, மதுரை உயர் நீதி­மன்­றக் கிளை­யில் தெரி­வித்­துள்­ளது.

பேர­றி­வா­ளன் உள்­ளிட்ட ஏழு பேர் தங்­களை விடு­தலை செய்­யக் கோரி தாக்­கல் செய்த மனு நேற்று முன்­தி­னம் விசா­ர­ணைக்கு வந்­தது. அப்­போது தமி­ழக அர­சின் சார்­பில் பதில் மனு தாக்­கல் செய்­யப்­பட்­டது.

இதே கோரிக்­கை­யு­டன் வேலூர் சிறை­யில் உள்ள நளினி ஏற்­கெ­னவே தாக்­கல் செய்த மனுவை சென்னை உயர் நீதி­மன்­றம் தள்­ளு­படி செய்­துள்­ள­தாக சுட்­டிக்­காட்­டிய அரசுத் தரப்பு, அதேபோல் இந்த மனு­வை­யும் தள்­ளு­படி செய்ய வேண்­டும் என வலி­யு­றுத்­தி­யது.

மேலும், ஆளு­நர், அதி­ப­ரின் முடிவு­க­ளுக்­காக காத்­தி­ருப்­ப­தை­யும் அரசுத் தரப்பு சுட்­டிக்­காட்­டி­யது.

இதை­ய­டுத்து, ஏழு பேர் விடு­தலை விவ­கா­ரத்­தில் நீதி­மன்­றம் எத்­த­கைய முடி­வை­யும் எடுக்க இய­லாது என்று நீதி­மன்­றம் தெரி­வித்­தது. பின்னர் வழக்கு விசா­ரணை ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.