சென்னை: தமிழகத்தில் கிருமித்தொற்று படிப்படியாக குறைந்து வருவதால் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவிருக்கிறார் என்று தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தற்போது அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகின்ற 23ஆம் தேதி காலை 6 மணியோடு முடிவடைகிறது.
இந்த நிலையில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக இன்று சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடைபெறுகிறது.
இதில் திரையரங்குகள் மற்றும் பள்ளிகள் திறப்பது குறித்தும் ஆலோசிக்கப்படவிருக்கிறது.
மருத்துவ நிபுணர்கள், அரசு உயர் அதிகாரிகள், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் உட்பட பலர் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

