கொவிட்-19 பாதிப்பை ஈடுசெய்ய கற்றல், கற்பித்தல் இயக்கம்

கொவிட்-19 பாதிப்பை ஈடுசெய்ய கற்றல், கற்பித்தல் இயக்கம்

1 mins read
fab7889e-d674-4059-9d4d-89b3fa92ffcb
-

சென்னை: கொவிட்-19 கார­ண­மாக தமிழ்­நாட்­டில் கடந்த 15 மாதங்களாக பள்­ளிக்­கூ­டங்­கள் செயல்படாமல் மூடியே கிடக்­கின்­றன.

இத­னால் மாண­வர்­கள் கல்வி மட்­டு­மின்றி மன­உ­ளைச்­சல், வாழ்­வி­யல் மாற்­றங்­கள் போன்­றவை கார­ண­மா­க­வும் பாதிக்­கப்­பட்டு இருக்­கி­றார்­கள்.

இந்த நிலை­மை­யைச் சரி­செய்ய அர­சாங்­கம் தீவி­ர­மான நட­வ­டிக்கை­களை எடுக்க வேண்­டும் என்று கல்­வி­யா­ளர்­களும் சமூக ஆர்­வலர்­களும் தொடர்ந்து வலி­யு­றுத்தி வரு­கி­றார்கள்.

இதைக் கருத்­தில்­கொண்டு மாநி­லம் தழு­விய அள­வில் 200 கோடி ரூபாய் செல­வில் கற்­றல், கற்­பித்­தல் இயக்­கம் ஒன்றை மாநில அர­சாங்­கம் விரை­வில் நடை­முறைப்­ப­டுத்­தும் என்று சட்­ட­மன்றத்­தில் நிதி அமைச்­சர் பழ­னி­வேல் தியா­க­ரா­ஜன் அறி­வித்­தார்.

ஆசி­ரி­யர்­கள், பட்­ட­தாரி மாண­வர்­கள், தொண்­டூ­ழி­யர்­கள், அரசு சாரா நிறு­வ­னங்­க­ளின் ஆத­ர­வு­டன் கல்­வி­யா­ளர்­க­ளின் வழி­காட்­ட லுடன் பள்­ளிக் கல்­வித் துறை இந்த இயக்­கத்தை அடுத்த ஆறு மாதத்­திற்கு முன்­னெ­டுக்­கும் என்று அவர் தெரி­வித்­தார்.

கொவிட்-19 கார­ண­மாக 2020 மார்ச் 20ஆம் தேதி முதல் சிறார்­களுக்கு முறை­யான கல்­வி­யைக் கற்­பிக்க முடி­யாத சூழ்­நிலை இருக்­கிறது. கல்வித் தொலைக்­காட்சி ஒளி­வ­ழி­கள், இணை­யம் வழி கல்வி என்று பல திட்­டங்­க­ளைத் தொடங்­கி­னா­லும் குக்­கி­ராம மக்­களை எட்ட முடி­ய­வில்லை என்று அமைச்­சர் சுட்­டி­னார்.

இதைக் கருத்­தில்­கொண்டு புதிய இயக்­கம் இடம்­பெ­றும் என்­றார் அவர்.