சாலை மரணங்கள் 25 ஆண்டுகளில் இல்லா அளவுக்கு குறைவு: கட்டுப்பாடுகள் காரணம்

சாலை மரணங்கள் 25 ஆண்டுகளில் இல்லா அளவுக்கு குறைவு: கட்டுப்பாடுகள் காரணம்

2 mins read
0478762d-a8b0-4bba-b7b8-a49f1ff7d500
-

சென்னை: தமிழ்­நாட்­டில் பல ஆண்டு கால­மாக அதி­க­ரித்து வந்த சாலை விபத்து மர­ணங்­களின் எண்­ணிக்கை 25 ஆண்­டு­களில் இல்­லாத அள­வுக்கு குறைந்து இருக்­கிறது.

கொரோனா தொற்றைத் தடுப்­பதற்­காக நடப்­புக்கு வந்த கட்­டுப்­பா­டு­களே இதற்கு முக்­கிய காரணம் என்று கூறப்­ப­டு­கிறது.

சென்ற ஆண்டு ஜன­வ­ரிக்­கும் டிசம்­ப­ருக்­கும் இடை­யில் நிகழ்ந்த சாலை விபத்­து­களில் 8,060 பேர் மர­ணம் அடைந்­த­னர். இதற்கு முன்­ன­தாக 1995ஆம் ஆண்­டில்­தான் சாலை விபத்து மரண எண்­ணிக்கை 9,000ஐ விட குறைந்து இருந்­தது என்று அர­சாங்க புள்­ளி­வி­வ­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

தமி­ழ­கத்­தில் 25 ஆண்­டு­களுக்கு முன்பு வாக­னங்­க­ளின் எண்­ணிக்கை ஒரு கோடிக்­கும் குறை­வாக இருந்­தது. இப்­போது இந்த எண்­ணிக்கை 3 கோடி­யை­விட அதி­கம் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. கடந்த 2016ல் சாலை விபத்­து­கள் கார­ண­மாக 17,218 பேர் மர­ண­ம­டைந்­து­விட்­டார்­கள். இந்த எண்­ணிக்கை படிப்­படி­யா­கக் குறைந்து 2019ல் 10,525 ஆக இறங்­கி­யது என்று போக்­கு­வரத்­துத் துறை புள்­ளி­வி­வ­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

சென்ற ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்­து­களில் 98.16% விபத்­து­கள் வாகன ஓட்­டு­நர்­க­ளின் கவ­னக் குறைவு கார­ண­மாக நிகழ்ந்­தன. தலைக்­க­வ­சம் அணிந்­தி­ருந்­தால் மோட்­டார்­சைக்­கிள் பய­ணி­களில் ஏறத்­தாழ 45% பேர் உயிர் பிழைத்து இருக்­க­லாம் என்­பது புள்­ளி­வி­வரங்­கள் மூலம் தெரி­கிறது.

சாலை விபத்­து­களில் மாண்­ட­வர்­களில் 37% மோட்­டார்­சைக்­கிள் ஓட்­டி­கள் மற்­றும் பய­ணி­கள்.

அள­வுக்கு அதிக வேகம், அள­வுக்கு அதி­க­மாக பொருட்­க­ளை­யும் ஆட்­க­ளை­யும் சரக்கு வாக­னங்­களில் ஏற்­றிச் செல்­வது, குடித்­து­விட்டு வாக­னம் ஓட்­டு­வது, சிவப்பு விளக்கை மீறி செல்­வது, வாக­னம் ஓட்­டும்­போது கைபே­சி­யில் பேசு­வது ஆகி­ய­வையே விதி­மீ­றல் சம்­ப­வங்­களில் குறிப்­பி­டத்­தக்­கவை.

சென்ற ஆண்­டில் 111,053 உரி­மங்­கள் ரத்தானதாக மூத்த போக்கு­வ­ரத்து அதி­காரி கூறினார்.