13 மாணவிகளுக்கு தொற்று

13 மாணவிகளுக்கு தொற்று

1 mins read
1d817729-b3c4-494a-a689-4b251881a73f
-

சேலம்: சேலம் அரசு மோகன் குமா­ர­மங்­க­லம் மருத்­து­வக் கல்­லூ­ரி­யைச் சேர்ந்த தாதி­யர் கல்­லூ­ரி­யில் பயி­லும் 13 மாண­வி­களுக்கு கொவிட்-19 தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது.

இதை­ய­டுத்து அங்கு படிக்­கும் 176 மாண­வி­களும் விடு­தி­யிலேயே தங்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­திக்கொள்ள வேண்­டுமென உத்­த­ர­விடப்பட்­டது.

மாநி­லத்­தில் கடந்த 16ஆம் தேதி முதல் மருத்­து­வக் கல்­லூரி­களில் நேரடி வகுப்­பு­கள் நடந்து வரு­கின்­றன. ஆனால் மாண­வி­களுக்குத் தொற்று ஏற்­பட்­டதை அடுத்து கல்­லூ­ரி­கள் மீண்­டும் மூடக்­கூ­டிய நிலை ஏற்­பட்டு இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இத­னி­டையே, தமிழகத்தில் கொவிட்-19 தொற்று இறங்கி வரு­வ­தா­க­வும் வியா­ழக்­கி­ழமை புதி­தாக 1,702 பேருக்குத் தொற்று ஏற்­பட்­ட­தா­க­வும் 29 பேர் மாண்டு­விட்­ட­தா­க­வும் அதி­கா­ர­பூர்வ தக­வல் தெரி­வித்­தன.

இவ்­வே­ளை­யில், தமிழ்­நாட்­டில் 60 கிரா­மங்­களில் 100 விழுக்­காடு தடுப்­பூசி போடப்­பட்டு இருப்­ப­தாக சுகா­தார அமைச்­சர் மா. சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­தார்.

இது­வரை ஏறத்­தாழ 2 கோடியே 50 லட்­சம் பேருக்கு தடுப்­பூசி போடப்­பட்டு உள்­ள­தாக அவர் கூறி­னார். 21 லட்­சம் தடுப்­பூ­சி­கள் கையி­ருப்­பில் உள்­ள­தாக மாநி­ல சுகா­தா­ரத் துறை செய­லா­ளர் ராதா­கி­ருஷ்­ணன் கூறினார்.