சிவகங்கையில் ஒரு பொள்ளாச்சி: தாக்குதல்; போலிஸ் தலையீடு; விசாரணை

சிவகங்கையில் ஒரு பொள்ளாச்சி: தாக்குதல்; போலிஸ் தலையீடு; விசாரணை

2 mins read
d552e563-9e80-4914-a263-02fe8e1debd8
-

சிவ­கங்கை: பொள்­ளாச்சி­யில் நிகழ்ந்த பாலி­யல் சம்­ப­வத்­தைப் போல் புதுக்­கோட்டை, சிவ­கங்கை மாவட்­டங்­களில் பெரிய அள­வில் பாலி­யல் கொடு­மை­கள் நிகழ்ந்­திருக்­க­லாம் என்று போலி­சார் சந்­தே­கப்­ப­டு­கி­றார்­கள்.

இணை­யத்­தில் வலம் வரும் இரண்டு காணொளிகள் இந்த விவ­கா­ரத்­தில பெரும் பர­ப­ரப்­பைக் கிளப்பி வரு­வ­தாக தமி­ழக ஊட­கங்­கள் தெரி­வித்­துள்­ளன.

இதன் தொடர்­பில் தமி­ழக ஊட­கங்­களில் மேலும் பல தக­வல்­கள் வெளி­யாகி வரு­கின்­றன.

புதுக்­கோட்டை மாவட்­டம், அறந்­தாங்­கி­யைச் சேர்ந்­த­ ராஜா என்­பவர், அறந்­தாங்கி, திருச்சி ஆகிய இடங்­களில் திரு­ம­ணம் போன்ற நி­கழ்ச்சிகளை நடத்தி தரும் நிறு­வனத்தை நடத்தி வரு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

ராஜா, தன் நிறு­வ­னத்­தில் பணி­பு­ரி­யும் பெண்­கள் சிலரை மதுப்­பழக்­கத்­துக்கு அடிமையாக்கி பாலி­யல் தொழி­லில் அவர்­களை ஈடு­படுத்தி வந்­த­தா­க­வும் ராஜாவே இடைத்­த­ர­க­ரா­கச் செயல்­பட்டு வந்­த­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது. வழிக்கு வராத பெண்­களை மிரட்டி அவர்­க­ளை­யும் பாலி­யல் தொழி­லில் ஈடு­ப­டுத்த ராஜா முயன்று வந்­துள்­ளார் எனத் தெரி­கிறது.

இந்­நி­லை­யில், பாதிக்­கப்­பட்ட பெண்­கள் இடைத்­த­ர­கர் ராஜாவை காரைக்­குடி அருகே அம­ரா­வ­தி­புதூர் பகு­திக்கு வரவழைத்து சர­மா­ரி­யா­க அவரைத் தாக்­கி­னர்.

இதைக் காட்­டும் காணொளி இணை­யத்­தில் பெரும் பர­ப­ரப்­பைக் கிளப்­பி­யது. பெண் ஒரு­வரை பாலியல் தொழி­லுக்கு வரு­மாறு ராஜா அழைத்த ஒலிப்­ப­தி­வும் இணை­யத்­தில் வெளி­யா­னது.

இத­னி­டையே, பாலி­யல் இடைத்­த­ர­கர் என்று கூறப்­படும் ராஜா, தன்னை சிலர் தாக்கி பணத்தைப் பறித்­துக்கொண்­ட­தாக சாக்­கோட்டை காவல் நிலை­யத்­தில் புகார் தெரி­வித்­தார்.

அதை­ய­டுத்து அந்­தக் காவல் நிலை­யத்­தில் வேலை பார்க்­கும் போலிஸ் அத­காரி ஒரு­வர், ராஜாவை தாக்­கி­ய­தா­கக் கூறப்­படும் பெண்­களு­டன் தொலைபே­சி­யில் தொடர்பு கொண்டு அவர்­க­ளைத் திட்­டி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது. ராஜா­வுக்கு ஆத­ர­வாக போலிஸ் அதி­காரி பேசிய ஒலிப்­ப­தி­வும் சமூக வலைத் தளங்­களில் வெளி­யாகி இருப்­பதா­கக் கூறப்­ப­டு­கிறது.

சிவ­கங்­கை­யில் இந்த விவ­காரம் விஸ்­வ­ரூ­பம் எடுப்­ப­தால் இது பற்றி பெரிய அள­வில் விசா­ர­ணை­யைத் தொடங்­கும்­படி உயர் அதி­கா­ரி­கள் உத்­த­ர­விட்­டுள்­ள­னர்.

பொள்­ளாச்சி பாலி­யல் கொடுமை சம்­ப­வத்­தைப் போன்று புதுக்­கோட்டை, சிவ­கங்கை மாவட்­டங்­களில் ராஜா­வும் அவ­ருக்­குப் பின்­ன­ணி­யில் உள்ள கும்­ப­லும் இளம் பெண்­களை மிரட்டி பாலி­யல் தொழி­லில் ஈடு­ப­டுத்­தி­யி­ருக்­க­லாம் என போலி­சார் சந்­தே­கிக்­கப்­ப­டு­வதாக ஊட­கங்­கள் கூறு­கின்­றன.

இத­னி­டையே, பொள்­ளாச்சி பாலி­யல் விவ­கா­ரம் தொடர்­பில் இந்த மாதம் அருண் குமார் என்­பவர் (இடது படம்) கைதா­னதை அடுத்து பொள்­ளாச்சி விவ­கா­ரம் மீண்­டும் பர­ப­ரப்­ப­டைந்­துள்­ளது.

சிபிஐ போலி­சார் பொள்­ளாச்­சி­யில் முகா­மிட்டு தொடர்ந்து விசா­ரணை நடத்தி வரு­வ­தால் மேலும் பல­ர் சிக்­க­லாம் என்று நம்­பப்­படு­கிறது. இந்த வழக்­கில் ஏற்­கெனவே கடந்த 2019ஆம் ஆண்டு ஐந்து பேரும் கடந்த ஜன­வரி மாதம் அதிமுக பிர­மு­கர் உட்­பட மூன்று பேரும் கைதா­யி­னர்.

பொள்­ளாச்சி விவகாரம் பற்றிய விசா­ர­ணையை ஆறு மாதங்­களில் முடிக்க வேண்­டும் என்று அண்மை­யில் சென்னை உயர் நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டது.