'கோடநாடு வழக்கில் உண்மை வெளிவர வேண்டும்' அமைச்சர்: அரசியல் உள்நோக்கம் இல்லை

'கோடநாடு வழக்கில் உண்மை வெளிவர வேண்டும்' அமைச்சர்: அரசியல் உள்நோக்கம் இல்லை

2 mins read
b0764f97-701c-4115-b088-3416381ec490
கோடநாடு பகுதியில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா வீடு. கோப்புப்படம்: ஊடகம் -

சென்னை: கோட­நாடு வழக்­கில் நீதி­மன்ற விதி­க­ளின்­ப­டியே விசா­ரணை நடை­பெற்று வரு­வ­தா­க­வும் இதில் எந்­த­வித பழி­வாங்­கும் நோக்­கமோ, அர­சி­யல் உள்­நோக்­கமோ கிடை­யாது என்­றும் அமைச்­சர் தங்­கம் தென்­ன­ரசு மீண்­டும் தெளி­வு­ப­டுத்தி உள்­ளார்.

ஜெய­ல­லி­தா­வுக்குச் சொந்­த­மான கோட­நாடு பங்­க­ளா­வில் நடந்­தது சாதா­ரண சம்­ப­வம் அல்ல என்­றும் கொலை, கொள்ளை நடந்­துள்­ளது என்­றும் குறிப்­பிட்ட அமைச்­சர், கோட­நாடு தமக்கு எத்­தனை முக்­கி­ய­மான இடம் என்­பதை ஜெய­லலி­தாவே முன்பு விளக்கி உள்­ள­தாகச் சுட்­டிக்­காட்­டி­னார்.

"ஜெய­ல­லிதா இருக்­கும் காலத்­தில் அந்­தப் பங்­க­ளா­வில் ஒரு தலை­மைச் செய­ல­கமே இயங்­கி­உள்­ளது. அப்­ப­டிப்­பட்ட இடத்­தில் நடந்த உண்­மை­களை தெரி­யப்­படுத்த வேண்­டும் என்று அதி­முக தொண்­டர்­கள் எதிர்­பார்க்­கின்­ற­னர்.

"ஆனால், இது முக்­கி­ய­மான விஷ­யம் கிடை­யாது என முன்­னாள் அமைச்­சர் ஜெயக்­கு­மார் கூறு­கி­றார். அவ­ருக்கு வேண்­டு­மா­னால் இது முக்­கி­ய­மான விஷ­ய­மாக இல்­லா­மல் இருக்­க­லாம். ஆனால், அதி­முகவில் உள்ள தொண்­டர்­க­ளுக்கு இது முக்­கி­ய­மான விஷ­ய­மாக இருக்­கிறது," என்­றார் அமைச்­சர் தங்­கம் தென்­ன­ரசு.

ஜெய­ல­லிதா மர­ணம் தொடர்பான விசா­ரணை ஆணை­யம் குறித்­தும் அதி­முக தொண்­டர்­கள் தொடர்ந்து விவ­ரம் கேட்டு வரு­வ­தா­கக் குறிப்­பிட்ட அவர், குற்­றம் செய்­த­வர்­க­ளுக்கு தண்­டனை பெற்­றுத் தர­வேண்­டும் என்று மக்­கள் எதிர்பார்ப்­ப­தா­கத் தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே கோட­நாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்­பாக சசி­கலா, முன்­னாள் முதல்­வர் பழ­னி­சாமி ஆகிய இரு­வ­ரை­யும் விசா­ரிக்க வேண்­டும் என வலி­யு­றுத்தி உயர் நீதி­மன்­றத்­தில் மனுத்­தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

இந்த வழக்­கில் குற்­றம் சாட்­டப்­பட்­ட­வர்­கள் தரப்­பில் இந்த மனு, தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­கிறது.

முன்­னாள் முதல்­வர் பழ­னி­சாமிக்கு கோட­நாடு கொலை வழக்­கில் உள்ள தொடர்­பு­கள் குறித்து விசா­ரிக்­கப்­பட வேண்­டும் என்­றும் கொள்ளை சம்­ப­வத்­தின்­போது காணா­மல் போன பொருள்­கள் குறித்து சசி­கலா, இள­வ­ரசி தரப்­பி­ன­ருக்­குத்­தான் அனைத்து விவ­ரங்­களும் தெரி­யும் என்­றும் மனு­தா­ரர்­கள் குறிப்­பிட்­டுள்­ள­னர்.

இந்­நி­லை­யில், கோட­நாடு வழக்கு இப்­போது 'நீதி­மன்­றத்­தில் விசா­ர­ணை­யில் இருப்­ப­தால், அது­கு­றித்து சட்­டப்­பே­ர­வை­யில் பேசக்­கூ­டாது என முன்­னாள் அமைச்­சர் ஜெயக்­கு­மார் வலி­யு­றுத்தி உள்­ளார்.