சென்னை: 200 வார்டுகளிலும் தலா ஒரு தடுப்பூசி மையம்

சென்னை: 200 வார்டுகளிலும் தலா ஒரு தடுப்பூசி மையம்

2 mins read
585123da-4849-43ed-beb2-5b7678554033
-

சென்னை: தமி­ழ­கத்­தில் கொரோனா தடுப்­பூசி போடும் நட­வ­டிக்கை தீவி­ரப்­ப­டுத்­தப்­படும் என மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் மா. சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­துள்­ளார்.

மேலும், தலை­ந­கர் சென்­னை­யில் உள்ள இரு­நூறு வார்­டு­க­ளி­லும் தலா ஒன்று என மொத்­தம் 200 தடுப்­பூசி மையங்­கள் செயல்­படும் என்­றும் அவர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசு­கை­யில் குறிப்­பிட்­டார்.

சென்­னை­யில் தடுப்­பூசி போடு­வோர் எண்­ணிக்கை குறை­வாக உள்­ளது என்­றும் இது­வரை மாந­க­ரில் 3.68 மில்­லி­யன் பேர் மட்­டுமே தடுப்­பூசி போட்­டுக் கொண்­டுள்­ள­தா­க­வும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் 2.57 லட்­சம் பேர் முதல் தவணை தடுப்­பூசி போட்­டுக் கொண்­ட­வர்­கள்.

மக்­கள் தொகை அடிப்­ப­டை­யில் பார்க்­கும்­போது 30 விழுக்­காட்­டி­னர் மட்­டுமே தடுப்­பூசி போட்­டுக் கொண்­டுள்­ள­னர். மற்ற நக­ரங்­க­ளு­டன் ஒப்­பி­டும்­போது இந்த எண்­ணிக்கை குறை­வா­னது.

சென்னை போன்ற பெரு­ந­க­ரங்­க­ளான கோல்­கத்­தா­வில் 5.29 மில்­லி­யன் பேரும் மும்­பை­யில் 8.66 மில்­லி­யன் பேரும் பெங்­க­ளூ­ரில் 9.61 மில்­லி­யன் பேரும் தடுப்­பூசி போட்­டுக் கொண்­டுள்­ள­னர் என தரவுகள் தெரிவிக்கின்றன.

சென்­னை­யில் இப்­போது அமைக்­கப்­பட்­டுள்ள முகாம்­கள் மக்­கள் வெகு­தூ­ரம் சென்று தடுப்­பூசி போடும் நிலை­யில் இருக்­கிறது.

"எனவே மக்­கள் எளி­தில் அணுகக்கூடிய இடங்­களில் முகாம்­களை அமைக்கத் திட்­ட­மிட்­டுள்­ளோம். அதன்­படி சென்­னை­யில் உள்ள 200 வார்­டு­க­ளி­லும் தலா ஒரு நிரந்­தர தடுப்­பூசி மையம் என்று 200 மையங்­கள் திறக்­கப்­படும்," என்­றார் அமைச்­சர் சுப்பிரமணியன்.

இதற்­கி­டையே, 80 வய­துக்கு மேற்­பட்ட முதி­யோர்­க­ளுக்கு வீடு தேடி சென்று தடுப்­பூசி போடும் திட்­டத்­தை­யும் சென்னை மாந­க­ராட்சி தொடங்கி இருக்­கிறது.

இந்நிலையில், தமிழகத்தில் நேற்று முன்தினம் மேலும் 1,604 பேருக்கு கிருமி தொற்றியது உறுதியானது. மேலும் 172 பேர் பலியாகிவிட்டனர் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.