கீழடி அகழாய்வில் பழங்கால தங்கக் காதணி கண்டெடுப்பு

கீழடி அகழாய்வில் பழங்கால தங்கக் காதணி கண்டெடுப்பு

1 mins read
314de4cc-b84e-4c3a-b7e9-e82446f5a2a6
தங்கக்காதணி. படம்: ஊடகம் -

சிவ­கங்கை: அக­ழாய்­வின்போது பழங்­கால தங்­கக்­கா­தணி கண்­டெடுக்­கப்­பட்­டது கீழ­டி­யில் முகா­மிட்­டுள்ள தொல்­லி­யல் நிபு­ணர்­க­ளுக்கு உற்­சா­கம் அளித்­துள்­ளது.

சிவ­கங்கை மாவட்­டம், திருப்­பு­வ­னம் அருகே உள்ள அக­ரம் பகு­தி­யில் ஏழாம் கட்ட அக­ழாய்­வுப் பணி­கள் நடந்து வரு­கின்­றன.

கடந்த சில வாரங்­களில் மட்­டும் ஆய்­வின்­போது உறை கிண­று­கள், பானை­கள், செங்­கல் கட்­டு­மா­னம், புகை­பி­டிப்­பான் கருவி, விலங்கு உருவ பொம்மை, தலை­ய­லங்­கா­ரத்­து­டன் கூடிய பெண் பொம்மை உள்­ளிட்­டவை கண்­டெ­டுக்­கப்­பட்­டன.

இது உல­கத் தமி­ழர்­களை வியப்­ப­டைய வைத்­துள்­ளது. இந்­நி­லை­யில் தங்க அணி­க­லன்­கள் சில கண்­டெ­டுக்­கப்­பட்­ட­தாக தக­வல் வெளி­யா­கி­ உள்­ளது.

ஓர் அணி­க­லன் அறுங்­கோண வடி­வி­லும் நடு­வில் ஒரு துளை­யும் அதனை இணைப்­ப­தற்கு வச­தி­யாக குச்சி போன்ற அமைப்­பு­ட­னும் உள்­ள­தாக நிபு­ணர்­கள் தெரி­வித்­துள்­ளனர்.

மற்­றோர் அணி­க­லன் தங்கக் குண்­டு­போல் காட்­சி­ய­ளிப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

கீழடி அக­ழாய்­வுப் பணி­கள் எதிர்­வ­ரும் செப்­டம்­பர் மாதம் முடிவுக்கு வரும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லை­யில் அங்கு ஏரா­ள­மான பொருள்­கள் கிடைத்து வரு­கின்­றன.

எனவே ஆய்­வுப்­ப­ணியை மேலும் சில மாதங்­க­ளுக்கு நீட்டிக்க வேண்­டும் என பல்வேறு தரப்­பி­ன­ரும் வலி­யு­றுத்தி வரு­கின்­ற­னர்.