எதிர்க்கட்சியினர் பேசும்போது அமைச்சர்கள் குறுக்கிட வேண்டாம் என முதல்வர் அறிவுறுத்து

எதிர்க்கட்சியினர் பேசும்போது அமைச்சர்கள் குறுக்கிட வேண்டாம் என முதல்வர் அறிவுறுத்து

1 mins read
3dc4f712-54e1-41f3-ac93-c2bad1d22809
ஸ்டாலின். படம்: ஊடகம் -

சென்னை: சட்­டப்­பே­ர­வை­யில் எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­கள் பேசும்­போது அமைச்­சர்­கள் அதி­கம் குறுக்­கிட வேண்­டாம் என முதல்­வர் மு.க.ஸ்டா­லின் அறி­வு­றுத்­தி­னார்.

இதைப் பல்­வேறு தரப்­பி­ன­ரும் வர­வேற்­றுள்­ள­னர்.

சட்­டப்­பே­ர­வை­யில் இப்­போது மானி­யக் கோரிக்­கை­கள் மீதான விவா­தங்­கள் நடை­பெற்று வரு­கின்­றன.

எதிர்க்­கட்­சி­கள் எழுப்­பும் பல்­வேறு துறை சார்ந்த கேள்­வி­களுக்கு சம்­பந்­தப்­பட்ட அமைச்­சர்­கள் பதில் அளிக்­கின்­ற­னர். இந்­நி­லை­யில் நேற்று முன்­தி­னம் நக­ராட்சி நிர்­வா­கத்­துறை, ஊரக வளர்ச்­சித்­துறை ஆகி­ய­வற்­றின் மானி­யக் கோரிக்­கை­கள் மீது விவா­தம் நடை­பெற்­றது. அப்­போது அதி­முக கொறடா எஸ்.பி.வேலு­மணி சில கருத்­து­க­ளைத் தெரி­விக்க, அவற்­றுக்கு அமைச்­சர்­கள் கே.என்.நேரு­வும் பெரிய கருப்­பனும் உட­னுக்­கு­டன் பதில் அளித்­த­னர்.

இத­னால் எஸ்.பி.வேலு­மணி பேச்­சில் அமைச்­சர்­கள் இரு­வ­ரும் அடிக்­கடி குறுக்­கிட வேண்டி இருந்­தது.

இதைக் கவ­னித்த முதல்­வர் மு.க.ஸ்டா­லின், எதிர்க்­கட்சியினர் சும்­போது அமைச்­சர்­கள் அதிகம் குறுக்­கிட வேண்­டாம் என்று அறி­வு­றுத்­தி­னார்.

"எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­கள் ஏதே­னும் முறை­கே­டு­கள், குற்­றச்­சாட்­டு­கள் குறித்து பேசி­னால் மட்­டும் இடை­ம­றித்து பதில் கூற­லாம். இல்­லை­யெ­னில், அவர்­கள் தெரி­விக்­கும் கருத்­து­க­ளுக்கு அமைச்­சர்­கள் தங்­க­ளு­டைய பதில் உரை­யின்­போது உரிய விளக்­கங்­களை அளிக்­க­லாம். அமைச்­சர்­கள் இதற்கு ஓத்­துழைப்பு வழங்க வேண்­டும்," என்­றார் முதல்வர் மு.க.ஸ்டா­லின்.