குமரி: ஊரடங்குத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமத்தில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனர். இதனால் கன்னியாகுமரி களைகட்டியுள்ளது.
சுமார் நான்கு மாதங்களுக்குப் பின்னர் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் கன்னியாகுமரியில் குவிந்து வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

