'கே.டி.ராகவனின் காணொளியை அண்ணாமலைதான் வெளியிடச் சொன்னார்'

'கே.டி.ராகவனின் காணொளியை அண்ணாமலைதான் வெளியிடச் சொன்னார்'

1 mins read
baa16463-c164-42b8-9363-71da9f5afabb
-

சென்னை: இரு தினங்­க­ளுக்கு முன்பு தமி­ழக பாஜக பொதுச்­செ­யலா­ளர் கே.டி.ராக­வன் தம் மீதான பாலி­யல் குற்­றச்­சாட்டை மறுத்தது­டன் கட்­சிப் பொறுப்­பில் இருந்­தும் வில­கி­னார்.

கே.டி.ராக­வனின் பாலி­யல் காெணாளியை அதே கட்­சி­யைச் சேர்ந்த யூடி­யூ­பர் மதன் ரவிச்­சந்­தி­ரன் வெளி­யிட்­டார்.

பாஜ­க­வி­னர் தங்­க­ளது அதி­கா­ரத்தைத் தவ­றான முறை­யில் பயன்­ப­டுத்தி பெண்­க­ளைப் பாலி­யல் தொந்­த­ர­வுக்கு உள்­ளாக்­கு­வதை அம்­ப­லப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே இந்­தக் காணொ­ளியைத் தான் வெளி­யிட்­ட­தாகவும் அவர் விளக்கம் அளித்­தி­ருந்­தார்.

அத்­து­டன், தமி­ழக பாஜக தலை­வர் அண்­ணா­ம­லை­யின் ஒப்பு­தலுடன்­தான் ேக.டி.ராக­வனின் காணொளி வெளி­யி­டப்­பட்­ட­தா­க­வும் அதற்­கான ஆதா­ர­மாக 'வாட்ஸ் அப்' உரை­யா­டல்­க­ளை­யும் அவர் வெளி­யிட்­டி­ருந்­தார்.

இதற்கிடையே, கே.டி.ராக­வன் தனது கட்­சிப் பத­வியை ராஜி­னாமா செய்ததைத் தொடர்ந்து, மறு­பு­றம் மதன் ரவிச்­சந்­தி­ரன், வெண்பா இரு­வ­ரும் பாஜ­க­வி­லி­ருந்து நீக்­கப்­பட்­ட­னர்.

காணொளி வெளியிட்டதில் மதனுக்கு ஏதும் உள்நோக்கம் இருக்குமோ? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை வாயிலாக சந்தேகம் எழுப்பி இருந்தார்.

இந்நிலையில், அண்ணாமலை தங்களுக்கு துரோகம் செய்து விட்டதாகவும் "நமது கட்­சிக்­காரப் பெண்­ணுக்கு நீதி தேவை. காெணாளியை வெளி­யி­டுங்­கள்," என்று அண்ணாமலைதான் கூறிய­தா­க­வும் மதன் ரவிச்சந்திரன் குற்றஞ்சாட்டி உள்ளார்.