17 ஆண்டுக்குப் பிறகு நிரபராதி என தீர்ப்பு

2 mins read
b3b786a4-a9fd-4654-9dc0-028cad37afb1
-

மதுரை: ஒன்­றரை வயது பெண் குழந்­தை­யைக் கிணற்­றில் வீசி கொலை செய்­த­தாக ஆயுள் தண்­டனை விதிக்­கப்­பட்டு, கடந்த 17 ஆண்­டு­க­ளாக சிறைத் தண்­டனை அனு­ப­வித்து வந்த சகுந்­தலா என்ற பெண் தற்­போது நிர­ப­ராதியாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்­டம், தாத்தை யங்­கார் பேட்­டை­யைச் சேர்ந்­த­வர் செல்­வ­ராஜ். இவ­ரது மனைவி சகுந்­தலா. இப்­போது 49 வய­தா­கிறது. இவர்­களது இரு மகள்­களில் ஒரு மக­ளுக்கு ஒன்­றரை வயது.

குடும்­ப சண்டை கார­ண­மாக கண­வ­ரி­டம் கோபித்­துக்கொண்டு 2002ல் தனது அம்மா வீட்­டுக்­குச் சென்­று­விட்­டார் சகுந்­தலா.

அடுத்த நாளே அவ­ரது ஒன்­றரை வயது குழந்தை கிணற்­றில் சட­ல­மா­க மிதந்தது.

இதை­த்தொடர்ந்து, திருச்சி மாவட்ட நீதி­மன்­றம் சகுந்­த­லா­வுக்கு ஆயுள் தண்­டனை வழங்­கி­யது.

இந்­தத் தண்­ட­னையை ரத்து செய்­யக்­கோரி, கடந்த 2014ல் சகுந்­தலா உயர் ­நீ­தி­மன்­றத்­தில் மேல்­மு­றை­யீடு செய்­தார். ஆனால் அது தள்­ளு­ப­டி­யா­கி­விட்­டது.

அதன்­பி­றகு, உச்ச நீதிமன்­றத்­தில் அவர் மேல்­மு­றை­யீடு செய்ய, இந்த வழக்கை மீண்­டும் விசா­ரிக்­கும்­படி உத்­த­ர­விட்­டது.

அந்த வழக்­கு நேற்று மதுரை உயர் நீதி­மன்­றத்­தில் விசா­ர­ணைக்கு வந்­தது.

சகுந்­த­லா­வின் வழக்­க­றி­ஞர் வாதா­டும்­போது, உடற்­கூறு அறிக்­கை­யில், "குழந்­தை­யின் குடல், நுரை­யீ­ர­லில் தண்­ணீர் இல்லை. குழந்தை இறந்த பிறகே சட­லம் கிணற்­றில் வீசப்­பட்­டுள்­ளது. சகுந்தலா தனது பெற்­றோர் வீட்­டிற்குத் தனி­யா­கத்­தான் சென்­றுள்­ளார். அத­னால் அவரை விடு­விக்க­வேண்­டும்," என்­றார்.

இதை­ய­டுத்து நீதி­ப­தி­கள், சகுந்­த­லா­வுக்கு வழங்­கப்­பட்ட ஆயுள் தண்­டனையை ரத்து செய்து, அவ­ரி­டம் அப­ரா­தத் தொகையை திருப்பி ஒப்­ப­டைக்­க­வேண்­டும்," என்று தீர்ப்­ப­ளித்­த­னர்.