350 பழங்களுடன் ஏழடி உயர வாழைத்தார்; மக்கள் வியப்பு

350 பழங்களுடன் ஏழடி உயர வாழைத்தார்; மக்கள் வியப்பு

1 mins read
a7c6f162-77ae-4179-92ca-9900bd8047a7
காவிரிக் கரையோரம் விளைந்த இந்த ஏழடி உயர இரு வாழைத்தார்களிலும் ஏறத்தாழ 350 பழங்கள் இருந்துள்ளன. படம்: ஊடகம் -

கரூர்: கரூர் வாழைக்­காய் மண்­டி­யில் ஓர் ஆளு­ய­ரத்­துக்­கும் மேலாக காய்த்­துப் பழுத்­தி­ருந்த ஏழடி உயர வாழைத்­தார்­கள் ஏலம் விடப்­பட்­டன. இதை கரூர் நக­ரப் பொது­மக்­களும் வியா­பா­ரி­களும் ஆச்­ச­ரி­யத்­து­டன் பார்த்­த­னர்.

நாமக்­கல் மாவட்­டத்­தில் உள்ள பொத்­த­னூர், இடை­யாறு ஆகிய பகு­தி­க­ளின் காவி­ரிக் கரை­யோ­ரம் இரு­ப­துக்­கும் மேற்­பட்ட கற்­பூ­ர­வள்ளி வாழைத்­தார்­கள் விளைந்­தி­ருந்­தன.

ஐந்­தடி முதல் ஏழடி உய­ரம் கொண்ட அந்த வாழைத்­தார்­களை வாழை விவ­சா­யி­கள் கரூர் சந்­தை­யில் ஏல­மிட்­ட­னர்.

குறைந்­தது 350 பழங்­க­ளைக் கொண்ட ஏழடி உயர வாழைத்­தார்­கள் தலா ரூ.1,100க்கு ஏலத்­தில் விற்­ப­னை­யா­ன­தால், அதை விளை­வித்த விவ­சா­யி­கள் பெரும் மகிழ்ச்­சி­ய­டைந்­த­னர்.

கற்­பூ­ர­வள்ளி, பூவன், ரஸ்­தாலி, ஏழ­ரசி, மொந்­தன், பச்­சைப்­ப­ழம் உள்­ளிட்ட வாழை வகை­களும் ஏல மிடப்­பட்­டன. கரூர் வர­லாற்­றி­லேயே ஏழடி உய­ரம் கொண்ட வாழைத்­தார் இப்­போ­து­தான் விளைந்­தி­ருப்­ப­தாக அவற்றை விளை­வித்த விவ­சா­யி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.