மதுரை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை செப்டம்பர் 2ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்து நேற்று உத்தரவிட்டது.
அன்றைய தினம், வழக்கில் சாட்சிகளாகக் கருதப்படும் கோடநாடு எஸ்டேட் மேலாளர், தடயவியல் நிபுணர், மின்வாரிய அதிகாரி மூவரும் நேரில் முன்னிலையாக உத்தரவிட்டுள்ள நீதிபதி, அவர்களிடம் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு விசாரணை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய் பாபா அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.
குற்றம்சாட்டப்பட்டவர்களில் முக்கிய குற்றவாளியான சயான் மட்டுமே நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
அரசுத் தரப்பில் வழக்கறிஞர்கள் ஷாஜகான், கனகராஜ் முன்னிலையாகினர்.
இந்த வழக்கு தொடர்பில் மேலும் ஒருசில முக்கிய நபர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதால் சயான், ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்தவரும் வாகன விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தவருமான கனகராஜின் அண்ணன் தனபாலிடமும் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை காவல்துறை தாக்கல் செய்யவில்லை.

