90% சென்னை ஆசிரியர்களுக்கு தடுப்பூசி நிறைவு

90% சென்னை ஆசிரியர்களுக்கு தடுப்பூசி நிறைவு

1 mins read
166483ef-aa9f-46cf-bab0-7b4c7193bab6
-
Google News Preferred Icon

சென்னை: தமி­ழ­கத்­தில் கொரோனா பாதிப்­பு­கள் பெரு­ம­ள­வில் குறைந்து வருவதால் ஊர­டங்­கில் தளர்­வு­கள் அறி­விக்­கப்­பட்டுள்­ளன. கல்­லூ­ரி­கள் திறக்­கப்­பட உள்ள நிலை­யில் பேரா­சி­

ரி­யர்­கள், மாண­வர்­க­ளுக்கு தடுப்­பூசி செலுத்த சிறப்பு முகாம் தொடங்­கப்­பட்டுள்­ளது. சென்னை நந்­த­னம் அரசு ஆட­வர் கலை கல்­லூ­ரி­யில் தடுப்­பூசி சிறப்பு முகாமை அமைச்­சர்­கள் மா. சுப்­பி­ர­ம­ணி­யன், பொன்­முடி துவக்கி வைத்­த­னர்.

அப்­போது பேசிய அமைச்­சர் மா. சுப்­பி­ர­ம­ணி­யன், "அனை­வ­ருக்­கும் தடுப்­பூசி என்ற இலக்கை நோக்கி தமி­ழ­கம் முன்­னேறி வரு­கிறது. முதல்­வர் மு.க.ஸ்டா­லின் கட்­டு­மான தொழி­லா­ளர்­கள், விளை­யாட்டு வீரர்­கள் என அனைத்து தரப்­பி­ன­ருக்­கும் தடுப்­பூசி செலுத்­தும் நிகழ்ச்­சி­களை தொடர்ச்­சி­யாக துவக்கி வைத்து வரு­கி­றார்.

"சென்னை மாவட்­டத்­தில் 90.11 விழுக்காட்டு ஆசி­ரி­யர்­க­ளுக்கு தடுப்­பூசி செலுத்­தப்­பட்­டுள்­ளது. சென்­னை­யிலுள்ள 112 கல்­லூ­ரி­

க­ளுக்­கும் நேரில் சென்று மாண­வர்­க­ளுக்கு தடுப்­பூசி செலுத்­தும் பணி வரும் செப்­டம்­பர் 1ஆம் தேதி தொடங்­கும்," என்று கூறி­னார்.