அதிமுக, பாஜக வெளிநடப்பு

அதிமுக, பாஜக வெளிநடப்பு

2 mins read
70f12673-f272-4af3-8b80-e52696f39c01
-

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிைறவேற்றம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் தீர்மானத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

சென்னை: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதையடுத்து அதிமுக, பாஜக உறுப்பினர்கள் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 3 புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்தியுள்ளது.

ஆனால் இந்த புதிய சட்டங் களால் தங்களது வாழ்வாதாரம் பறி போகும் என்றும் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட சில மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் பல மாதங்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளிடம் மத்திய அரசு நடத்திய 11 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன.

இந்த நிலையில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டசபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மத்­திய அர­சின் மூன்று வேளாண் சட்­டங்­க­ளுக்கு எதி­ராக சட்­ட­ச­பை­யில் தீர்­மா­னம் கொண்டு­ வந்து பேசிய முதல்­வர் மு.க ஸ்டா­லின், "மூன்று வேளாண் சட்­டங் ­க­ளை­யும் முழு­மை­யாக எதிர்க்க வேண்­டிய கடமை நமக்கு இருக்­கிறது, இந்தச் சட்­டம் கூட்­டாட்­சித் தத்­து­வத்­திற்கு எதி­ரா­னது. வேளாண் சட்­டங்­கள் வேளாண்­மையை அழிப்­ப­து­போல இருப்­ப­தாக விவ­சா­யி­கள் சொல்­கி­றார்­கள். அதனை எதிர்த்து போராட்­ட­மும் நடை­பெற்று வரு­கிறது. விவ­சா­யி ­க­ளின் வாழ்­வு ­செ­ழிக்க மூன்று வேளாண் சட்­டங்­க­ளை­யும் ரத்து செய்ய வேண்­டும் என்ற தீர்­மா­னத்தை ஒரு­ம­ன­தாக நிறை­வேற்ற வேண்டுகிறேன்," என்று கேட்டுக் கொண்டார்.

இந்­தத் தீர்­மா­னத்­திற்கு ம.தி.மு.க, இந்­திய கம்­யூ­னிஸ்ட், மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் எம்.எல்.ஏ.க்கள் ஆத­ரவு தெரி­வித்­தனர்.

தீர்­மா­னத்­தின் மீது பேசிய பண்­ருட்டி எம்.எல்.ஏ வேல்­மு­ரு­கன், "விவ­சா­யி­க­ளுக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்­து­வ­தோடு பெரும் நிறு­வ­னங்­க­ளுக்கு சாத­க­மா­க­வும் வேளாண் சட்­டங்­கள் உள்­ளன," என்று தெரி வித்தார்.

பா.ம.க சட்­ட­மன்றக் குழுத் தலை­வர் ஜி.கே. வேலு­மணி, "விவ­சா­யி­கள் மத்­தி­யில் வேளாண் சட்­டம் அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது," என்று குறிப்பிட்டார்.

காங்­கி­ரஸ் சட்­ட­மன்றக் குழுத் தலை­வர் செல்­வப்­பெ­ருந்­தகை, "போரா­டும் விவ­சா­யி­க­ளுக்கு நான் இருக்­கி­றேன் என்­பதை தெரி­யப் ­ப­டுத்­தும் வகை­யில் முதல்­வர் மு.க.ஸ்டா­லின் வேளாண் சட்­டங் ­க­ளுக்கு எதி­ரான தீர்­மா­னத்தை கொண்டு வந்­துள்­ளார்," என்றார்.

ஆனால் வேளாண் சட்­டங்­க­ளுக்கு எதி­ரான தீர்­மா­னத்தை எதிர்த்து பா.ஜனதா எம்.எல்.ஏக்­கள் சட்­ட­ச­பை­யில் இருந்து வெளி­ந­டப்பு செய்­த­னர். வேளாண் சட்­டங்­க­ளுக்கு எதி­ரான தீர்­மா­னத்தை ஏற்க மறுத்து அ.தி.மு.க எம்.எல்.ஏக்­களும் வெளி ­ந­டப்பு செய்­த­னர்.

பின்னர் தீர்­மா­னம் குரல் வாக்­கெ­டுப்பு மூலம் நேற்று நிறை­வேற்றப்­ பட்­டது.