'கோவில்களில் விரைவில் குடமுழுக்கு பணிகள்'

1 mins read
ab82d126-f9e0-48f3-a582-f5f5963dbaa7
-

சென்னை: கோவில்­களில் விரை­வில் திருப்­ப­ணி­களை முடித்து குட­மு­ழுக்கு நடத்­து­வ­தற்­கான பணி­களை மேற்­கொள்ள வேண்­டும் என்று அமைச்­சர் சேகர் பாபு கூறி­உள்­ளார். சென்னை நுங்­கம்­பாக்­கம் இந்து சமய அற­நி­லை­யத்­துறை ஆணை­யர் அலு­வ­ல­கத்­தில் கோவில் மேம்­பாடு மற்­றும் வளர்ச்­சித் திட்­டப் பணி­கள் குறித்த ஆய்­வுக்­ கூட்­டம் நடந்­தது. இந்­தக் கூட்­டம், இந்து சமய அற­நி­லை­யத்­துறை ஆணை­யர் கும­ர­கு­ரு­ப­ரன் முன்­னி­லை­யில் நடை­பெற்­றது.

அப்­போது பேசிய அமைச்­சர் சேகர் பாபு, "கோவில்­களில் விரை­வில் திருப்­ப­ணி­களை முடித்து குட­மு­ழுக்கு நடத்­து­வ­தற்­கான பணி­களை மேற்­கொள்ள வேண்­டும். அர்ச்­ச­கர் மற்­றும் ஓது­வார் பயிற்சி பள்­ளி­களில் மாண­வர் சேர்க்­கை­களை அதி­கப்­ப­டுத்தி தனி­யார் பள்­ளி­க­ளுக்கு இணை­யாக தரம் உயர்த்தி பள்ளி வளா­கத்தை தூய்­மை­யாக வைக்க வேண்­டும். பக்தர்­ க­ளுக்கு அடிப்­படை வச­தி­களை செய்ய வேண்­டும். விரை­வில் காலி பணி­யி­டங்­கள் நிரப்­பப்பட வேண்டும்," என்­றார். "ஆக்­கி­ர­மிப்­ பா­ளர்­க­ளி­டம் இருந்து மீட்­கப்­பட்ட ரூ.625 கோடி மதிப்­பு நிலங்­களை முறை­யாக பரா­ம­ரித்து வரு­வாயை பெருக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். கோவில் யானை­ களுக்கு மாதம் ஒரு முறை மட்­டுமே மருத்­துவப் பரி­சோ­தனை செய்­யப்­பட்டு வந்­தது. இனி 15 நாட்­க­ளுக்கு ஒரு முறை மருத்­துவப் பரி­சோ­தனை செய்ய வேண்­டும்," என்று அமைச்சர் கூறினார்.