சென்னை: கல்லூரிக்கு வரும் மாணவர்கள் அனைவரும் முதல் தவணை தடுப்பூசியாவது கட்டாயமாகப் போட்டிருக்கவேண்டும் என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வலியுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. இதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், 18 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு நேற்று முதல் செப்டம்பர் 1ஆம் தேதிக்குள் தடுப்பூசி போடவேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் வலியுறுத்திக் கூறியுள்ளது.
மாணவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டதை உறுதிசெய்து கொள்ள வேண்டும் என மாவட்ட சுகாதாரத் துறையும் அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில், "சென்னையில் 112 அரசு, தனியார் கல்லுாரிகளில் மாணவர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமைத் துவக்கி உள்ளோம். மருத்துவத் துறையின் உதவியுடன் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துக் கல்லுாரிகளிலும் தடுப்பூசி போடும் திட்டத்தை விரிவுபடுத்த உள்ளோம்.
"செப்டம்பர் 1ல் கல்லுாரிகள் திறக்கப்படும்போது, மாணவர்கள் தடுப்பூசி போட்டிருந்தால்தான் வகுப்புக்குள் அனுமதிக்கப்படுவர்," என்று பொன்முடி கூறியுள்ளார்.

