தமிழ்நாட்டிற்கு மேலும் 1.176 மி. தடுப்பூசிகள்

தமிழ்நாட்டிற்கு மேலும் 1.176 மி. தடுப்பூசிகள்

1 mins read
5a938e47-450c-4b97-911c-085af979a3a5
-

சென்னை: தமிழ்­நாட்­டிற்கு மேலும் 1,176,000 கொவி­ஷீல்டு தடுப்­பூ­சி­கள் நேற்று வந்து சேர்ந்­தன.

மாநி­லத்­தின் எல்லா மாவட்ட மருத்­து­வ­ம­னை­க­ளி­லும் 24 மணி நேர­மும் கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளும் வசதி ஏற்­படுத்­தப்­பட்டுள்­ளது. அத்­து­டன், 80 வய­திற்கு மேற்­பட்ட முதி­ய­வர்­க­ளுக்கு அவர்­க­ளின் வீடு­களுக்கே நேரில் சென்று தடுப்­பூசி போடும் வச­தி­யும் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், நாளை மறு­நாள் 1ஆம் தேதி­யில் இருந்து தமிழ்­நாட்­டில் பள்ளி, கல்­லூ­ரி­கள் திறக்­கப்­ப­ட­வுள்­ளன.

அதற்­கு­முன் ஆசி­ரி­யர்­கள், ஊழி­யர்­கள், மாண­வர்­கள் அனை­வ­ரும் கொரோனா தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளும்­படி கல்வித்­துறை அறி­வு­றுத்­தி­யுள்­ளது.

இத­னை­ய­டுத்து, கூடு­த­லா­கத் தடுப்­பூ­சி­களை அனுப்பி வைக்­கும்­படி மத்­திய அர­சி­டம் தமி­ழக அரசு கோரிக்கை விடுத்­தது.

அதனை ஏற்­றுக்­கொண்ட மத்­திய சுகா­தா­ரத் துறை, புனே நக­ரில் உள்ள மத்­திய மருந்­துக் கிடங்­கில் இருந்து தமி­ழ­கத்­திற்கு 11.76 லட்­சம் கொவி­ஷீல்டு தடுப்­பூ­சி­களை விடு­வித்­தது.

அந்­தத் தடுப்­பூ­சி­கள் அடங்­கிய 98 பெட்­டி­கள் சென்னை விமான நிலை­யத்தை நேற்று வந்­த­டைந்­தன.

அவற்றில் 1,155,170 தடுப்பூசிகள் மக்­கள் நல்­வாழ்­வுத் துறை­யி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டன. எஞ்சிய 20,830 தடுப்­பூ­சி­கள் தனி­யார் மருத்­து­வ­ம­னை­க­ளுக்கு வழங்­கப்­பட்­டன.

1.7 மி. தடுப்பூசிகள் கையிருப்பு

இத­னி­டையே, தமிழ்­நாட்­டில் 17 லட்­சம் கொரோனா தடுப்­பூ­சி­கள் கையி­ருப்பு உள்­ள­தாக மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­துள்­ளார்.

இந்த மாதத்தில் மத்திய அரசின் தொகுப்பில் இருந்து 23 லட்சம் தடுப்பூசிகள் பெறப்பட்டு உள்ளதாக அவர் கூறினார். அத்­து­டன், மாநி­லத்­தில் 150க்கும் மேற்­பட்ட கிரா­மங்­களில் தடுப்­பூசி முழு­மை­யாக செலுத்­தப்­பட்­டுள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டார்.