மெரினாவில் கூட்டம்; நிபுணர்கள் அச்சம்

மெரினாவில் கூட்டம்; நிபுணர்கள் அச்சம்

1 mins read
419cca43-b435-43fb-b3ba-b64235df47a4
-

சென்னை: ஊர­டங்கு தளர்­வு­கள் அறி­விக்­கப்­பட்­டதை அடுத்து சென்னை­யில் உள்ள மெரினா கடற்­கரை உள்­ளிட்ட பல்­வேறு பகு­தி­களில் மக்­கள் கூட்­டம் அலை­மோ­து­கிறது. குறிப்­பாக மாலை வேளை­யில் பொது­மக்­கள் கூட்­டம் கூட்­ட­மாக வருகை தரு­கின்­ற­னர்.

அவர்­களில் பலர் முகக்­க­வ­சம் அணி­வ­தில்லை, சமூக இடை­வெளி­யை­யும் கடைப்­பி­டிப்­ப­தில்லை என்­பது சுகா­தார நிபுணர்­க­ளைக் கவ­லைப்­பட வைத்­துள்­ளது.

இவ்வாறு பொறுப்பற்­றும் அலட்­சி­ய­மா­க­வும் செயல்­பட்­டால் தமி­ழ­கத்­தில் மீண்­டும் தொற்­றுப் பாதிப்பு அதி­க­ரித்­து­வி­டும் என நிபு­ணர்­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர்.

சுமார் நான்கு மாதங்­க­ளுக்­குப் பிறகு தமி­ழகத்தின் பல்­வேறு பகுதி­களில் மக்­கள் அதி­க­ளவு கூடும் பகு­தி­கள் பொதுப்­ப­யன்­பாட்­டுக்­காக திறக்­கப்­பட்­டுள்­ளன. கடற்­க­ரை­கள், பூங்­காக்­களில் காலை­யில் நடைப்­பயிற்சி மேற்­கொள்­வோர் மட்­டுமே அனு­ம­திக்­கப்­பட்டு வந்த நிலை­யில், ஊர­டங்­குத் தளர்­வு­கள் அறி­விக்­கப்­பட்­ட­தால் மக்­கள் எந்­நே­­ர­மும் இந்த இடங்­க­ளுக்­குச் சென்று வர இய­லும்.

தமி­ழ­கத்­தில் செப்­டம்­பர் 6ஆம் தேதி­வரை ஊர­டங்கு நீட்­டிக்­கப்­பட்­டுள்ள போதி­லும், பல தளர்­வு­களும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளன. எனவே, கடந்த 23ஆம் தேதி முதல் மக்­கள் அதி­கம் கூடும் பல இடங்­கள் திறக்­கப்­பட்­டன.

எனி­னும் எதிர்­பார்த்­த­தை­விட மிக அதி­க­மா­னோர் கடற்­க­ரை­கள், பூங்­காக்­களில் கூடு­கி­றார்­கள். பெரும்­பா­லா­னோர் குழு­வாக வந்து போவ­து­டன், முகக்­க­வ­சம்கூட அணிவ­தில்லை என சமூக ஆர்வ­லர்­கள் சுட்­டிக்­காட்­டு­கின்­ற­னர். இத­னால் மீண்­டும் தொற்­றுப்­பரவல் அதி­க­ரிக்­கும் அபா­யத்தை உணர்ந்து, அர­சாங்­கம் மீண்­டும் கடும் கட்­டுப்­பா­டு­களை விதிக்க வேண்­டும் என அவர்­கள் வலி­யு­றுத்தி உள்­ள­னர்.

இதே­போல் சென்னையில் பட்­டி­னப்­பாக்­கம், பெசன்ட்­ந­கர் உள்­பட இதர கடற்­க­ரை­க­ளி­லும் மக்­கள் கூட்­டம் அதிகமாக உள்ளது.

முகக்கவசம் அணியாது, சமூக இடைவெளியின்றி அலட்சியம்