ஐந்து சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: கைபேசி காணொளியால் சிக்கியவர் கைது

ஐந்து சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: கைபேசி காணொளியால் சிக்கியவர் கைது

1 mins read
c89c7953-949a-4bf2-bbc2-a618639313c3
-

சென்னை: தடை செய்­யப்­பட்ட குட்கா போதைப்­பொ­ருள்­களை விற்­பனை செய்­த­வ­ரின் கைபேசி­யில் பதி­வாகி இருந்த ஆபாச காணொ­ளி­கள் மூலம் அவர் ஐந்து சிறு­மி­க­ளுக்குப் பாலி­யல் தொல்லை கொடுத்­தது தெரிய வந்­தது.

இதை­ய­டுத்து அவரை போக்சோ சட்­டத்­தின் கீழ் போலி­சார் கைது செய்­துள்­ள­னர்.

சென்­னை­யில் பெட்­டிக்­கடை நடத்தி வரும் 48 வய­தான பெரு­மாள் (படம்) என்ற ஆட­வர் குட்கா பொருள்­களை விற்­பனை செய்­வ­தாக கிடைத்த தக­வலை அடுத்து போலி­சார் நட­வ­டிக்கை மேற்­கொண்­டனர்.

இதில் அவ­ரது கடை­யில் இருந்து 30 கிலோ குட்கா பொருள்­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன. விசா­ர­ணை­யின்­போது, அவ­ரது கைபேசியை ஆய்வு செய்­த­போது அதில் பல சிறு­மி­க­ளுக்கு அவர் பாலி­யல் தொல்லை கொடுக்­கும் ஆபா­சக் காட்­சி­கள் பதி­வாகி இருந்­தன. அதிர்ச்சி அடைந்த போலி­சார், காணொ­ளி­யில் காணப்­பட்ட சிறு­மி­களை அழைத்து விசா­ரித்த போது பெரு­மா­ளின் மோச­மான செயல்­ அம்­ப­ல­மா­னது. கீழ்­ப்பாக்­கத்­தைச் சேர்ந்த ஒன்­பது வயது சிறு­மி­யின் தாய்க்குத் தெரிந்தே இரண்டு ஆண்­டு­க­ளாக பாலி­யல் தொல்லை கொடுத்து வந்­துள்­ளார் பெரு­மாள்.

பின்­னர் சிறு­மி­யின் தாயா­ரை­யும் தன் இச்­சைக்­குப் பயன்­ப­டுத்தி உள்­ளார். இது­வரை அவர் ஐந்து சிறு­மி­க­ளுக்குப் பாலி­யல் தொல்லை கொடுத்­தது உறு­தி­யாகி உள்­ளது. விசா­ரணை நீடித்து வரு­கிறது.

"ஒரு சிறு­மி­யின் நான்கு வயது தோழி­யைக்கூட பெரு­மாள் விட்­டு­வைக்­க­வில்லை. அந்­தக் குழந்­தைக்­கும் பாலி­யல் தொல்லை கொடுத்­தது தெரிய வந்­துள்­ளது.

"எனவே, விசா­ர­ணையைத் தீவி­ரப்­ப­டுத்தி உள்­ளோம்," என்று போலிஸ் தரப்­பில் கூறப்­ப­டு­கிறது.