கடற்கரையில் 22 மாநிலங்களின் வீரர்-வீராங்கனைகள் மல்யுத்தம்

கடற்கரையில் 22 மாநிலங்களின் வீரர்-வீராங்கனைகள் மல்யுத்தம்

1 mins read
03e7ca57-100b-4483-be63-283d30d60828
மகாபலிபுர கடற்கரையில் நடக்கும் மல்யுத்தப் போட்டியில் வெற்றிபெற மல்லுக்கட்டும் வீரர், வீராங்கனைகள். போதிய பயிற்சியின்மை காரணமாக வட இந்திய வீரர்களுக்கு நிகராக தமிழக வீரர், வீராங்கனைகளால் மல்லுக்கட்ட முடியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. படம்: ஏஎஃப்பி -

மாமல்­ல­பு­ரம்: இந்­தி­யா­வில் முதல் முறை­யாக கடற்­கரை மல்­யுத்­தப் போட்டி சென்­னையை அடுத்த மகா­பலி­புர கடற்­க­ரை­யில் நடந்­தது.

ஆட­வர், மக­ளிர் என இரு­பாலருக்­கும் தனித்­த­னி­யாக நடத்­தப்­பட்ட போட்­டி­யில் தமிழ்­நாடு, தெலுங்கானா, கேரளா, ஹரி­யானா, மகா­ராஷ்­டிரா, ராஜஸ்­தான், டெல்லி உள்­ளிட்ட 22 மாநி­லங்­க­ளைச் சேர்ந்த வீரர், வீராங்­கனை­கள் தங்­கள் பலத்தை நிரூ­பிக்க கடற்கரை மண­லில் மல்­லு­கட்­டி­னர்.

தமி­ழ­கத்­தில் மிக நீண்ட கடற்­கரை இருப்­ப­தால் முதல்­முறையாக இப்போட்­டியை மாமல்லபுரத்­தில் அறி­மு­கப்­படுத்­தி­ய­தாக மல்­யுத்த சங்­கத் தலை­வர் ரோக்­டாஷ் சிங் கூறி­யுள்­ளார்.

இந்­திய விளையாட்டு அமைச்­சின் அனு­ம­தி­யு­டன் கடந்த இரு நாட்­க­ளா­க தேசிய அள­வில் போட்டியை இந்­திய கடற்­கரை மல்­யுத்த சங்­கம் நடத்தி வந்­தது. ஹரி­யானா மூன்று தங்­கம், இரு வெண்­க­லப் பதக்­கத்துடன் முதலிடத்திலும் மகா­ராஷ்­டிரா இரண்டு தங்­க­த்துடன் இரண்டாவது இடத்திலும் ராஜஸ்­தான் ஒரு தங்­கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்­கலப் பதக்கத்துடன் மூன்றாவது இடத்திலும் போட்டியில் வெற்றிபெற்றன.