சாலை மறியல்: ஓபிஎஸ், அதிமுக எம்எல்ஏக்கள் கைது

சாலை மறியல்: ஓபிஎஸ், அதிமுக எம்எல்ஏக்கள் கைது

1 mins read
4d07f4c9-d11a-4cd2-89b6-d34d757c3cb4
-

விழுப்புரம்: விழுப்­பு­ரத்­தில் உள்ள ஜெய­ல­லிதா பல்­க­லைக்­க­ழ­கத்தை சிதம்­ப­ரம் அண்­ணா­மலை பல்­கலைக்­க­ழ­கத்­து­டன் இணைப்­ப­தற்­கான மசோதா நேற்று சட்­டப்­பே­ர­வை­யில் நிறை­வே­றி­யது.

இந்த மசோ­தா­வுக்கு எதிர்ப்பு தெரி­வித்து பேர­வை­யில் இருந்து வெளி­ந­டப்பு செய்த அதி­முக உறுப்­பி­னர்­கள் சாலை­ மறி­ய­லில் ஈடு­பட்­ட­னர்.

அதி­முக துணை ஒருங்­கி­ணைப்­பா­ளர் ஓ.பன்­னீர்­செல்­வம் தலை­மை­யில் மெரினா - வாலாஜா சாலை­யில் அமர்ந்த பேரவை உறுப்­பி­னர்­கள் குந்தியிருப்புப் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

இதை­ய­டுத்து, ஓ.பன்­னீர்­செல்­வம் உள்­ளிட்ட எம்­எல்­ஏக்­கள் கைதாகினர்.

இதே­போல், விழுப்­பு­ரம் பழைய பேருந்து நிலை­யத்­தில் திரு­வள்ளு வர் சிலை அருகே திடீ­ரென சாலை­யில் அமர்ந்து போராட்­டம் நடத்­திய முன்­னாள் அமைச்­சர் சி.வி. சண்­மு­கம் உள்­பட 300க்கும் மேற்­பட்ட அதி­மு­க­வி­னர் நேற்று கைது செய்­யப்­பட்­ட­னர்.

சி.வி.சண்­மு­கம் கைதைக் கண்­டித்து விழுப்­பு­ரம்- புதுச்­சேரி சாலை­யில் அதி­மு­க­வி­னர் திர­ளாக அமர்ந்து போரட்டத்தில் ஈடு­பட்­ட­னர். இதை­ய­டுத்து அவர்­களும் கைது செய்யப்பட்டனர்.