தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'ஒரு லட்சம் பிள்ளையார் சதுர்த்தி விழா'

2 mins read
81f0bae3-093e-4b91-92ee-73b7953894c1
-

சென்னை: விநா­ய­கர் சதுர்த்தி விழா கொண்­டா­டி­னால் மட்­டும் கொரோனா வரும், பர­வும் என்று சொன்­னால் அதை யாரும் ஏற்க மாட்­டார்­கள் என்று இந்து முன்­ன­ணி­யி­னர் கூறியுள்ளனர்.

இந்து முன்­ன­ணி­யைச் சேர்ந்த மாநில துணைத் தலை­வர் கார்த்தி­ கே­ய­ன், மாநில அமைப்­பா­ளர் பக்­த ­வத்­ச­லன் ஆகி­யோர் செவ்­வாய்க் கிழமை அன்று செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­த­னர்.

அப்­போது பல்­வேறு கேள்­வி­களை எழுப்­பி­னர்.

"டாஸ்­மாக் திறந்­தி­ருக்­க­லாம், மால், சினிமா தியேட்­டர்­க­ளுக்கு மக்­கள் போக­லாம், பேருந்து எல்­லாம் ஓட­லாம், எல்லா இடங்­க­ளுக்­கும் மக்­கள் போக­லாம், வர­லாம்.

"ஆனால் விநா­ய­கர் சதுர்த்தி விழா கொண்­டா­டி­னால் மட்­டும் கொரோனா வரும், பர­வும் என்று சொன்­னால் யாரும் ஏற்க மாட்­டார்­கள்," என்று ஆவே­சத்­து­டன் அவர்­கள் கூறி­னர்.

தமி­ழக அரசு மத­ச்சார்­பற்ற அர­சாக இருப்­ப­தற்­காக தமி­ழ­கத்­தில் உள்ள அனைத்து கோவில்­ களுக்கும் இந்­துக்­கள் சென்று சாமி­யி­டம் முறை­யி­டு­வார்­கள் என்­றும் அவர்­கள் கூறி­னர்.

கொள்­ளை­நோய் பர­வல் கார­ண­மாக விநா­ய­கர் சதுர்த்தி விழா தொடர்­பில் பொது இடங்­களில் சிலை­களை நிறு­வு­வது, பொது இடங்­களில் விழாவைக் கொண்­டா­டு­வது ஆகி­ய­வற்­றிற்கு அனு­மதி மறுக்­கப்­பட்­டுள்­ளது.

அதோடு, அமைப்­பாக விநா­ய­கர் சிலை­களை ஊர்­வ­ல­மாக எடுத்­துச் சென்று நீர்­நி­லை­களில் கரைக்­க­வும் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

ஆனால் தனி நபர்­க­ளாக தங்­க­ளது வீடு­களில் விநா­ய­கர் சிலை­களை வைத்து வழி­பட்டு அதை தனி­ந­ப­ராக சென்று நீர்­நி­லை­களில் கரைப்­ப­தற்கு அரசு அனு­ம­தி­ய­ளித்­துள்­ளது.

"எங்­களைப் பொறுத்தவரை­எந்த அர­சாங்­கம், யார் முதல்­வர் என்று பார்ப்­ப­தில்லை. இந்­துக்­கள் வழி­பாட்டு உரி­மைக்கு குறுக்கே யார் வந்து நின்­றா­லும் எதிர்ப்­போம். எங்­க­ளுக்கு எல்­லாமே விநா­ய­கர்­தான். கடந்த ஆண்டு பொது இடங்­க­ளுக்கு பதி­லாக தனி­யார் இடங்­களில் வைத்து பூஜை செய்­தோம்.

"இந்த ஆண்­டும் சென்­னை­யில் ஆயி­ரம் இடங்­க­ளி­லும் தமி­ழ­கம் முழு­வ­தும் திட்­ட­மிட்­ட­படி உச்­ச­ நீதி­மன்ற உத்­த­ரவை மதித்து கொரோனா நடத்தை விதி­க­ளுக்கு உட்­பட்டு 1 லட்­சத்து 25 ஆயி­ரம் இடங்­க­ளி­லும் விநா­ய­கர் சிலை வைக்­கப்­பட்டு பூஜை­கள் நடத்­தப்­படும்," என்று இந்து முன்­னணி அமைப்­பி­னர் கூறியுள்ளனர்.