தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அரசு சேவைக்கு லஞ்சம்: 93 விழுக்காட்டினர் கருத்து

1 mins read
a8a64320-fc95-4d82-abda-47050deafa9e
-

சென்னை: தமி­ழ­கத்­தில் அரசு சேவை­க­ளைப் பெறு­வ­தற்கு லஞ்­சம் கொடுக்­கும்­படி வற்­பு­றுத்­தப்­பட்­ட­தாக ஆய்வு ஒன்­றில் பங்­கேற்­ற­வர்­களில் 93 விழுக்­காட்­டி­னர் தெரி­வித்­துள்­ள­னர்.

மேலும், 82 விழுக்­காட்­டி­னர் அரசு சேவையை அணு­கு­வ­தில் பெரும் அதி­ருப்தி அடைந்­த­தா­க­வும் கூறி­யுள்­ள­னர். அறப்­போர் இயக்­கம் இந்த ஆய்வை மேற்கொண்டது.

அரசு சேவை­க­ளைப் பெறு­வ­தில் நில­வும் பல்­வேறு சிர­மங்­க­ளை­யும் அதில் நடந்­தே­றும் முறை­கே­டு­க­ளை­யும் வெளிச்­சம் போட்­டுக்காட்­டும் வகை­யில் ஆய்வு முடி­வு­களை வெளி­யி­டு­வ­தாக அந்த இயக்­கம் தெரி­வித்­துள்­ளது.

தங்­க­ளுக்­குக் கிடைத்த தர­வு­க­ளின் அடிப்­ப­டை­யில் பார்க்­கும்­போது, மாநி­லம் முழு­வ­தும் வரு­வாய், பதி­வுத்­து­றை­யில்­தான் அதிக ஊழல் நடப்­ப­தாக அந்த இயக்­கம் கூறு­கிறது.

அரசு சேவை­க­ளைப் பெறு­வ­தில் உள்ள பிரச்­சி­னை­கள் தொடர்­பாக எந்­த­வித அர­சி­யல் குறுக்­கீ­டு­களும் இல்­லாத தனி அமைப்பு ஒன்று விசா­ரணை நடத்த வேண்­டும் என்று 84 விழுக்­காட்­டி­னர் வலி­யு­றுத்­தி­னர்.

தமிழ்­நாடு சேவை உரி­மைச் சட்­டத்­தில் சேர்க்­கப்­பட வேண்­டிய அம்­சங்­க­ளின் பட்­டி­ய­லைத் தயா­ரிக்க உத­வும் வகை­யில் இந்த ஆய்வு நடத்­தப்­பட்­ட­தாக அறப்­போர் இயக்­கம் கூறி­யுள்­ளது.