உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீட்டிப்பு

உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீட்டிப்பு

1 mins read
cab4577d-e638-4c90-abd6-5e64b410a5b4
-

சென்னை: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் வாக்களிக்கும் நேரம் காலை 7 முதல் இரவு 7 வரை நீட்டிக்கப்படுவதாக மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

தமி­ழ­கத்­தில் விடு­பட்டுப் போன வேலூர், ராணிப்­பேட்டை, திருப்­பத்­தூர் உள்­ளிட்ட ஒன்­பது மாவட்­டங்­களில் ஊரக உள்­ளாட்சி அமைப்புகளுக்­கான தேர்­தலை நடத்­தும் பணி­களில் ஆணை­யம் தீவி­ரம் காட்டி வரு­கிறது.

தமிழ்நாடு பஞ்சாயத்து தேர்தல் விதிமுறைகளின்படி தேர்தலில் வாக்களிக்கும் நேரம் 10 மணி நேரத்துக்கு மிகாமல் காலை 7 முதல் மாலை 5.30 மணி வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கொரோனா நோயாளிகள் வாக்களிக்க ஏதுவாக வாக்களிக்கும் நேரத்தை காலை 7 முதல் இரவு 7மணி வரை 12 மணி நேரமாக தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளது.