புதுக்கோட்டை: திருமணத்திற்கு ஏன் எனக்கு அழைப்பு விடுக்க வில்லை என்று கேட்டு வாக்கு வாதம் செய்த நண்பனை, சக நண்பர்கள் கொலை செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்துள்ள சம்பவம் தொடர்பாக போலிசார் எட்டுப் பேரை கைது செய்தனர்.
கடந்த சனிக்கிழமை ஆலங்குடி யைச் சேர்ந்த விஜய்க்கும் அவரது நண்பர் சசிதரனுக்கும் இடையே மது போதையில் தகராறு ஏற்பட்ட தாகவும் அன்றிரவே சசிதரன் பத்திற்கும் மேற்பட்ட நண்பர்களுடன் சேர்ந்து விஜய்யை வெட்டி கொன்ற தாகவும் கூறப்படுகிறது.
சசிதரன் உள்பட எட்டுப் பேரை கைது செய்த போலிசார், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரையும் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
ஆலங்குடி போலிசாரின் விசாரணையில் சசிதரனின் திருமணத்திற்கு விஜய்யை அழைக்காததால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதும் அதைத் தொடர்ந்து விஜய்யை சக நண்பர்களுடன் சசிதரன் கொலை செய்ததும் தெரியவந்தது.

