செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
baaf75f7-464e-44f8-bf85-85769e9a0dc8
-

தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்பனை

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்கப்படும் என்றும் போடாதவர்களுக்கு மதுபானம் விற்கப்பட மாட்டாது என்றும் இம்மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா அறிவித்துள்ளார். இம்மாவட்ட மக்களில் 97% பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் மேலும் கூறியுள்ளார்.

அமைச்­ச­ரை பாராட்டிய பாஜக உறுப்­பி­னர் சரஸ்வதி

சென்னை: தற்­போது சட்­ட­மன்­றக் கூட்­டத் தொடர் நடை­பெற்று வரும் நிலை­யில், மொடக்­கு­றிச்சி பாஜக எம்எல்ஏ டாக்­டர் சரஸ்­வதி பேசும்­போது, ''மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்­சர் மா சுப்­பி­ர­ம­ணி­யம் நல்ல முறை­யில் பணியாற்றி வரு­கி­றார். மன­தில் மாசு இல்­லா­மல் பணி­யாற்ற வேண்­டிய துறை சுகா­தா­ரத் துறை. அந்­தச் சேவையை அமைச்­சர் மா.சு. போல வேறு யாரா­லும் செய்யமுடி­யாது,'' என்று பாராட்­டி­யுள்­ளார்.

ஆண்களுக்கும் ரயிலில் சலுகை

சென்னை: சென்னை மற்றும் புறநகர் மின்சார ரயில்களில் அலுவலக நேரங்களில் ஆண் பயணிகளுக்கு இருந்த நேரக் கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இவர்கள் இரு முறை தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழைக் காண்பித்த பிறகே கட்டணச் சீட்டு வழங்கப்படும். திரும்பி வருவதற்கான கட்டணச் சீட்டு, சீசன் டிக்கெட்டுகளையும் வாங்கி பயணம் செய்யலாம். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மின்சார ரயிலில் நேரக் கட்டுப்பாடின்றி பயணிக்கலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மூன்று மாணவிகளுக்குப் பாதிப்பு

நாமக்கல்: தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு மூன்று நாள்களே ஆன நிலையில், மூன்று மாணவிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம், மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவியும் அரியலூரில் படிக்கும் 9ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிகள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். சக மாணவர்கள், ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.