50 ஆண்டு பின்தங்கியுள்ளதாக உசிலம்பட்டி மக்கள் வேதனை

2 mins read
2555c4f0-a6c6-400a-b7ea-15038faa5e95
-

உசி­லம்­பட்டி: தஞ்­சா­வூர் மாவட்­டத்­தின் எல்­லை­யில் அமைந்­துள்­ளது உசி­லம்­பட்டி கிரா­மம். இந்­தக் கிராம மக்­கள் தங்­க­ளது ஊரில் எந்த ஒரு அடிப்­படை வச­தி­யும் இல்­லா­மல் ெபரும் அவதிப்­பட்டு வரு­வ­தாக வேதனை தெரி­வித்­துள்­ள­னர்.

உசி­லம்­பட்­டி­யில் ஏறக்­கு­றைய 300 குடும்­பத்­தி­னர் வசித்து வரு கின்­ற­னர். விறகு வெட்­டு­வ­தும் துைடப்­பம் தயா­ரிப்­ப­தும்­தான் இவர்­க­ளது முக்­கிய தொழி­லாக இருந்து வரு­கிறது.

பள்­ளிக்­கூ­டம், மலிவு விலை­யில் பொருள்­களை விற்­கும் ரேஷன் கடை, மருத்­துவ வசதி, பேருந்து வசதி, குடி­நீர் வசதி என எந்த ஒரு வச­தி­யும் கிடைக்­கா­மல் அக­தி­கள் போல் இந்­தக் கிராம மக்­கள் வாழ்ந்து வரு­கின்­ற­னர்.

ஐந்து வய­தான ஒன்­றாம் வகுப்பு மாண­வன் தான் படிக்­கும் பள்­ளிக்கு 5 கிலோ மீட்­டர் தூரம் நடந்து செல்லவேண்­டிய அவ­ல­நிலையும் உள்­ளதாகக் கூறப்படுகிறது.

"மருத்­துவ அவ­சர உதவி தேவை எனில், 20 கிலோ­மீட்­டர் தூர­முள்ள தஞ்­சா­வூர் மருத்­து­வக்­கல்­லூரி மருத்­து­வ­ம­னைக்­குச் செல்ல வேண்டியுள்­ளது. அரசு வழங்­கும் இல­வச அரிசியை வாங்­கு­வ­தற்­காக பத்து கிலோ­மீட்­டர் நடந்து செல்லவேண்­டிய அவல நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்ளோம்," என்கின்றனர் இப்­ப­குதி மக்­கள்.

இந்நிலையில், உட­ன­டி­யாக குழந்­தை­களின் நலன் கருதி இப்­பகு­தி­யில் பள்­ளிக்­கூ­டத்தை திறக்கவேண்­டும் என மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்­ள­னர்.

சுகா­தா­ர­மற்ற குடி­நீரை பரு­கு­வ­தால் நோய்த்­தொற்று ஏற்­படும் அபா­ய­மும் உள்­ளது. ஆரம்ப சுகா­தார நிலை­யம் கூட இங்கு இல்லை. உல­கம் வேக­மாக வளர்ச்சி பெற்று ­வ­ரும் நிலை­யில், எங்­கள் கிரா­மம் மட்­டும் 50 ஆண்டு காலம் பின்­னோக்கிச் சென்று கொண்­டி­ருப்பது வேதனை அளிக்கிறது என அப்­பகுதி மக்­கள் தெரி­விக்­கின்­ற­னர்.