சென்னை: சிறுவர்கள் கொவிட்-19 தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் (படம்) கூறியுள்ளார்.
மூன்றாவது அலை அக்டோபர் இறுதியில் உச்சம் பெறலாம் என்று கணிப்புகள் கூறும் நிலையில், நீலகிரி மாவட்டம், ஊட்டியில் செய்தியாளர்களிடம் செளமியா பேசி னார். "நீலகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரைக்கும் கொரோனா தடுப்பில் மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. மூன்றாம் அலை பரவும்போது சிறுவர்கள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்படலாம். ஆனால், அதுகுறித்து கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில், அவர்களுக்கு பாதிப்பு குறைவாகத்தான் இருக்கும். தொடர்ந்து முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கூட்டத்தைத் தவிர்ப்பது முக்கியம்," என்றார்.