செளமியா: சிறுவர்களுக்கு பாதிப்பு அதிகம் ஏற்படாது

செளமியா: சிறுவர்களுக்கு பாதிப்பு அதிகம் ஏற்படாது

1 mins read
b659a86e-518a-43af-95ac-1e836b4cdbb6
-

சென்னை: சிறு­வர்­கள் கொவிட்-19 தொற்­றால் அதி­கம் பாதிக்­கப்­பட்­டா­லும் அவர்­க­ளுக்கு பெரிய அள­வில் பாதிப்பு ஏற்­ப­டாது என உலக சுகா­தார அமைப்­பின் தலைமை விஞ்­ஞானி சௌமியா சுவா­மி­நா­தன் (படம்) கூறி­யுள்­ளார்.

மூன்­றா­வது அலை அக்­டோ­பர் இறு­தி­யில் உச்­சம் பெற­லாம் என்று கணிப்­பு­கள் கூறும் நிலை­யில், நீல­கிரி மாவட்­டம், ஊட்­டி­யில் செய்தி­யா­ளர்­க­ளி­டம் செள­மியா பேசி னார். "நீல­கிரி மாவட்­டத்­தைப் பொறுத்­த­வ­ரைக்­கும் கொரோனா தடுப்­பில் மிகச்­சி­றப்­பாகச் செயல்­பட்டு வரு­கிறது. மூன்­றாம் அலை பர­வும்­போது சிறு­வர்­கள் அதிக எண்­ணிக்­கை­யில் பாதிக்­கப்­ப­ட­லாம். ஆனால், அது­கு­றித்து கவ­லைப்­ப­டத் தேவை­யில்லை. ஏனெ­னில், அவர்­க­ளுக்கு பாதிப்பு குறை­வா­கத்­தான் இருக்­கும். தொடர்ந்து முகக்கவ­சம் அணி­வது, சமூக இடை­வெ­ளி­யைக் கடைப்பிடிப்­பது, கூட்­டத்தைத் தவிர்ப்­பது முக்­கி­யம்," என்­றார்.