நீதிபதி: வசந்தியால் காவல்துறைக்கு களங்கம் விளைந்துள்ளது

1 mins read
8e495395-15ce-490e-bb12-3b6be914fdf3
வசந்தி. படம்: ஊடகம் -

மதுரை: ஒரு தையல்­கா­ர­ரி­டம் இருந்து ரூ.10 லட்­சம் பணத்­தைப் பறித்த போலிஸ் துணை அதி­காரி வசந்­தி­யால் காவல்­து­றைக்கே பெரும் களங்­கம் விளைந்­துள்­ள­தாக ஒரு வழக்கு விசா­ர­ணை­யின்­போது நீதி­பதி வேதனை தெரி­வித்­துள்ளார்.

சிவ­கங்கை மாவட்­டம், இளை­யான்­கு­டி­யைச் சேர்ந்­த­வர் அர்­ஷத், 32. தையல்­கா­ர­ரா­ன இவர், தனது தொழிலை விரி­வு­ப­டுத்­து­வ­தற்­காக ரூ.10 லட்­சம் பணத்­தைக் கட­னா­கப் பெற்­றுள்­ளார்.

அர்­ஷத்­தின் நண்­பர் மூலம் இந்த தகவலை அறிந்­து­கொண்ட மதுரை, நாக­மலை புதுக்­கோட்டை போலிஸ் அதி­காரி வசந்தி, போலிஸ் வாக னத்­தில் வந்து இறங்­கி­யுள்­ளார்.

அர்­ஷத்­தைப் பிடித்து மிரட்டி பணத்­தைப் பறித்­துக்­கொண்டு அவரைத் துரத்தி அடித்­துள்­ளார்.

தனது பணத்­தை அர்­ஷத் திருப் பிக் கேட்டதற்கு, "கஞ்சா வழக்கு போட்டு கைது செய்­து­வி­டு­வேன்," எனவும் வசந்தி மிரட்­டி­ உள்ளார்.

கடந்த ஜூலை மாதம் நடந்த சம்­ப­வம் குறித்து அர்­ஷத், மதுரை மாவட்ட போலிஸ் உயர் அதி­கா­ரி­யி­டம் புகார் அளித்­ததைத் தொடர்ந்து வசந்தி கைதானார்.

இவ்வழக்கு விசாரணை­யின்­போது, வசந்­தி­யின் சார்­பில் தாக்­கல் செய்­யப்­பட்ட முன் பிணை மனுவை மீட்­டுக்­கொள்­வதற்கு அனு­மதி வழங்­கிய நீதி­பதி புக­ழேந்தி, "நாட்டு மக்­க­ளுக்கு முன்னுதார­ண­மாக இருக்­க­வேண்­டிய காவ­லர்­களே குற்­றச்­செ­யல்­களில் ஈடு­படு­வ­தால் சாதா­ரண மக்­கள் காவல்­துறை மீது வைத்துள்ள நம்­பிக்­கையை இழந்து விடுகின்றனர். யார் தவறு செய்­தா­லும் தண்­டனை கிடைக்­கும் என்ற நம்­பிக்­கையை மக்­க­ளுக்கு காவல்­துறை ஏற்­ப­டுத்தவேண்­டும்," என­ அறிவுறுத்தினார்.