தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைத் தேடி வெளிநாடுகளிலும் ஆய்வு'

3 mins read
19bcdddb-6ddb-4c17-98de-4614753c4571
மு.க.ஸ்டாலின். கோப்புப்படம் -

முதல்வர்: மலேசியா, இந்தோனீசியா, தாய்லாந்துக்கு தொல்லியல் குழு செல்லும்

சென்னை: தமிழ்ப் பண்­பாட்­டின் வேர்­க­ளைத் தேடி, இந்­திய நாடெங்­கும் அதே­போல் கடல்­க­டந்து பய­ணம் செய்து தமி­ழர்­கள் வெற்­றித்­த­டம் பதித்த வெளி­நா­டு­க­ளி­லும் தமிழ்­நாடு தொல்­லி­யல் துறை உரிய அனு­ம­தி­கள் பெற்று இனி ஆய்­வுப் பணி­களை மேற்­கொள்­ளும் என முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

சட்­டப்­பே­ர­வை­யில் அவர் நேற்று முக்கிய அறி­விப்­பு­களை வெளி­யிட்­டார். அப்­போது, தமி­ழ­ரின் பண்­பாட்டு அடை­யா­ளங்­களைப் பறை­சாற்ற இனி உல­கெங்­கும் பய­ணம் செய்­வோம் என்­றார். கேரளா, ஆந்­திரா, கர்­நா­டகா, ஒடிசா உள்­ளிட்ட மாநி­லங்­களில் ஆய்­வு­கள் மேற்­கொள்­ளப்­படும் என்­றார் முதல்­வர்.

"சங்­க­கால துறை­மு­க­மான முசிறி, தற்­போது பட்­ட­ணம் என்ற பெய­ரில் கேரளவில் அமைந்­துள்­ளது. சேர­நாட்­டின் தொன்­மை­யி­னை­யும் பண்­பாட்­டி­னை­யும் அறிந்து கொள்­ளும் வகை­யில், அம்மாநிலத் தொல்­லி­யல் வல்­லு­நர்­க­ளு­டன் இணைந்து ஆய்­வுப்­பணி மேற்­கொள்­ளப்­படும்.

"ஆந்­திராவில் உள்ள வேங்கி, கர்­நா­டகாவில் தலைக்­காடு, ஒடிசா மாநி­லத்­தி­லுள்ள பாலூர் ஆகிய வர­லாற்­றுச் சிறப்­பு­டைய இடங்­களில் ஆய்­வு­கள் மேற்­கொள்ள உரிய நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­படும்," என்­றார் முதல்­வர் மு.க.ஸ்டா­லின்.

அன்­றைய ரோமப் பேர­ர­சின் ஒரு­ப­கு­தி­யாக விளங்­கிய எகிப்து நாட்­டி­லுள்ள குசிர்-அல்-காதிம், பெர்­னிகா, ஓமன் நாட்­டின் கோர் ரோரி ஆகிய இடங்­களில் பழந்­தமி­ழ­கத்­தோடு வணி­கத் தொடர்­பு­கள் இருந்­த­தா­கக் குறிப்­பிட்ட அவர், அதை உறுதி செய்­யும் வகை­யில், தமிழ் எழுத்து பொறிக்­கப்­பட்ட பானை ஓடு­கள் கிடைத்­துள்­ள­தா­கச் சுட்­டிக்­காட்­டி­னார்.

அந்­தப் பகு­தி­களில், அந்­தந்த நாட்­டின் தொல்­லி­யல் வல்­லு­நர்­க­ளு­டன் இணைந்து ஆய்­வு­கள் மேற்­கொள்­ளப்­படும் என்று குறிப்­பிட்ட அவர், இந்­தோ­னீ­சியா, தாய்­லாந்து, மலே­சியா, வியட்­நாம் உள்­ளிட்ட நாடு­க­ளி­லும் ஆய்­வு­களை மேற்­கொள்ள நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­படும் என்­றார்.

"மாமன்­னன் இரா­சேந்­திர சோழன் வெற்­றித்­த­டம் பதித்த தென்­கி­ழக்கு ஆசிய நாடு­க­ளான இந்­தோ­னீ­சியா தாய்­லாந்து, மலே­சியா, வியட்­நாம் ஆகிய நாடு­களில் அமைந்­துள்ள வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க இடங்­களில் அந்­தந்த நாட்டு தொல்­லி­யல் வல்­லு­நர்­கள் துணை­யோடு, உரிய அனு­மதி பெற்று ஆய்­வு­கள் மேற்­கொள்­ளப்­படும்.

"மேலும், 'யாதும் ஊரே யாவ­ரும் கேளிர்' என உல­கிற்கு அறி­வித்த தமி­ழ­ரின் பண்­பாட்டு அடை­யா­ளங்­க­ளைத் தேடி, இனி உல­கெங்­கும் பய­ணம் செய்­வோம்.

இந்­தி­யத் துணைக்­கண்­டத்­தின் வர­லாறு, இனி தமிழ் நிலப்­ப­ரப்­பில் இருந்­து­தான் தொடங்கி எழு­தப்­பட வேண்­டும் என்­ப­தைச் சான்­று­க­ளின் அடிப்­ப­டை­யில் அறி­வி­யல் பூர்­வ­மாக நிறு­வு­வதே நமது அர­சின் தலை­யா­யக் கடமை," என்­றார் முதல்­வர் மு.க.ஸ்டா­லின் பேரவையில் பேசும் போது குறிப்பிட்டார்.

கிபி 16ஆம் நூற்­றாண்டு கல்­வெட்டு கண்­டெ­டுப்பு

திருப்­ப­ரங்­குன்­றம் அருகே கிபி 16ஆம் நூற்­றாண்­டைச் சேர்ந்த கிரந்­தம் எழுத்­து­க­ளு­டன் கூடிய கல்­வெட்டு, சிற்­பம் ஆகி­யவை கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளன. கரு­வே­லம்­பட்டி பகு­தி­யைச் சேர்ந்த சூரிய பிர­காஷ் என்­ப­வர் இது தொடர்­பாக சில தக­வல்­களைச் சேக­ரித்­துள்­ளார்.

அவர் அளித்த தக­வ­லின் அடிப்­ப­டை­யில், அப்­ப­கு­தி­யைச் சேர்ந்த கல்­லூரி முது­கலை வர­லாற்­றுத்­துறை உதவி பேரா­சி­ரி­ய­ரும் பாண்­டி­ய­நாடு பண்­பாட்டு மையத்­தின் தொல்­லி­யல் கள ஆய்­வா­ள­ரு­மான முனை­வர் து.முனீஸ்­வ­ரன் தலை­மை­யில் பேரா­சி­ரி­யர்­கள் சிலர் அடங்­கிய ஆய்­வுக்­குழு ஒன்று, அப்­ப­கு­தி­யின் மேற்­ப­ரப்பை கள ஆய்வு செய்­த­னர்.

அப்­போது, அங்­குள்ள ஒரு விவ­சாய நிலத்­தில் கிரந்­தம் கல்­வெட்­டும் படைப்பு சிற்­ப­மும் கண்­டெ­டுக்­கப்­பட்­டன. இக்­கல்­வெட்டை படி­யெ­டுத்து ஆய்வு செய்­த­போது கி.பி. 16ஆம் நூற்­றாண்­டைச் சேர்ந்­தது எனத் தெரி­ய­வந்­த­து.