சுகேஷ் கூட்டாளிகள் நால்வரிடம் விசாரணை

சுகேஷ் கூட்டாளிகள் நால்வரிடம் விசாரணை

2 mins read
1dff896b-55f1-4af6-a858-542a6ea27ef7
சுகேஷ். படம்: ஊடகம் -

சென்னை: இருநூறு கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரின் நெருங்கிய கூட்டாளிகள் நான்கு பேரிடம் டெல்லி போலிசார் சென்னையில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணை விடிய விடிய நீடித்தது என்றும் சென்னை அருகே அவர் வாங்கிய சொகுசு வீடு உட்பட பல்வேறு சொத்துகள் எப்படி வந்தன என்பது குறித்து பல்வேறு முக்கிய தகவல்கள் போலிசாருக்கு கிடைத்துள்ளன என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்­தல் ஆணைய அதி­கா­ரி­க­ளுக்கு லஞ்­சம் கொடுத்து, அதி­மு­க­வின் இரட்டை இலை சின்­னத்­தைப் பெற்று தரு­வ­தாக டிடிவி.தின­க­ர­னி­டம் பல கோடி ரூபாய் பேரம் பேசி­ய­தாக எழுந்த குற்­றச்­சாட்­டுக்­குப் பிறகே சுகேஷ் குறித்து தமி­ழக ஊட­கங்­களில் பர­ப­ரப்­புச் செய்­தி­கள் வெளி­யா­கின.

இதை­ய­டுத்து அவர் கைது செய்­யப்­பட்டு திகார் சிறை­யில் அடைக்­கப்­பட்­டார்.

இந்­நி­லை­யில், அவ­ருக்கு சென்னை அருகே உள்ள கிழக்கு கடற்­கரை சாலை­யில் உள்ள வீடு, சொகுசு கார்­கள் வாங்­கிக்­கொ­டுத்த கம­லேஷ், அருண் முத்து, மோகன்­ராஜ், நடிகை லீனா மரி­யம்­பா­லின் மேலா­ளர் சாமு­வேல் ஆகிய நால்­வ­ரி­டம் நேற்று முன்­தி­னம் டெல்லி போலி­சார் விசா­ரணை நடத்­தி­னர்.

பல தொழி­ல­தி­பர்­கள், அர­சி­யல் பிர­மு­கர்­க­ளி­டம் அவர்­க­ளுக்­குத் தேவை­யான திரை­ம­றைவு வேலை­க­ளைச் செய்து கொடுப்­ப­தாக உறுதி அளித்து பல கோடி­களை சுருட்டி உள்­ளார் சுகேஷ். இவ­ரது காதலி லீனா இவ­ருக்கு உடந்­தை­யாக இருந்­துள்­ளார்.

மோசடி மூலம் கிடைத்த பெருந்­தொ­கையை வைத்து சொகுசு வீடு, 16 சொகுசு கார்­கள் என்று சுகேஷ் ஆடம்­பர வாழ்க்கை வாழ்ந்­துள்­ளார்.

இது குறித்த முக்கிய தகவல்களை அவரது கூட்டாளிகள் அண்மைய விசாரணையின்போது தெரிவித்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நீடிக்கிறது.

இந்த மோசடி தொடர்பாக மேலும் சிலர் கைதாகலாம் எனக் கூறப்படுகிறது.