தமிழகத்தில் தொற்றுப் பாதிப்பு மெல்ல அதிகரிப்பு: கோவையில் கடும் கட்டுப்பாடு

தமிழகத்தில் தொற்றுப் பாதிப்பு மெல்ல அதிகரிப்பு: கோவையில் கடும் கட்டுப்பாடு

2 mins read
345c1427-a763-4e51-8990-fa8de4bff39a
-

சென்னை: தமி­ழ­கத்­தில் கொரோனா கிரு­மித்­தொற்று பாதிப்பு மெல்ல அதி­க­ரிப்­ப­தாக கூறப்­படும் நிலை­யில், நேற்று முன்­தி­னம் புதி­தாக 1,631 பேருக்கு தொற்­றுப் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது உறு­தி­யா­னது.

நேற்று முன்­தி­னம் ஒரே நாளில் 25 பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர். மேலும், 1,523 பேர் தொற்­றில் இருந்து குண­ம­டைந்­துள்­ள­னர்.

தமி­ழ­கத்­தில் இது­வரை கொரோனா தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை சுமார் 2.6 மில்­லி­யன் ஆகும்.

தின­மும் ஆயி­ரக்­க­ணக்­கான மாதி­ரி­கள் பரி­சோ­திக்­கப்­ப­டு­கின்­றன. நேற்று முன்­தி­னம் மட்­டும் 158,197 மாதி­ரி­கள் பரி­சோ­திக்­கப்­பட்­டுள்­ளன.

மாநி­லம் முழு­வ­தும் தொற்று பாதிப்­பு­டன் சிகிச்சை பெறு­ப­வர்­கள் எண்­ணிக்கை 16,304ஆக உயர்ந்­துள்­ளது.

கோவை­யில்­தான் தின­மும் அதி­க­மா­னோர் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர். நேற்று முன்­தி­னம் அங்கு 235 பேருக்­கும் சென்­னை­யில் 174 பேருக்­கும் செங்­கல்­பட்­டில் 135 பேருக்­கும் புதி­தாக கிருமி தொற்றி உள்­ளது.

இதை­ய­டுத்து கோவை­யில் கொரோனா கட்­டுப்­பா­டு­கள் அதி­க­ரித்­துள்­ளன. அங்கு பொது இடங்­க­ளுக்­குச் செல்­ப­வர்­கள் கொரோனா தொற்று இல்லை என்­பதை உறு­தி­செய்­யும் சான்­றி­தழை வைத்­தி­ருக்க வேண்­டும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கேர­ளாவை ஒட்டி கோவை மாவட்­டம் அமைந்­துள்­ள­தால் அதன் எல்­லைப் பகு­தி­யில் கண்­கா­ணிப்பு தீவி­ரம் அடைந்­துள்­ளது.

கேர­ளா­வி­லும் தொற்­றுப்­பா­திப்பு தொடர்ந்து அதி­க­ரித்து வரு­வ­தால் அங்­கி­ருந்து கோவைக்கு வரு­வோர் கொரோனா சான்­றி­தழ் வைத்­தி­ருப்­பது கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்­ளது என தமி­ழக சுகா­தா­ரத்­துறை அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

மேலும், திரை­ய­ரங்­கு­களில் 50 விழுக்­காட்­டுக்­கும் அதி­க­மாக இருக்­கை­கள் நிரப்­பப்­பட்­டால் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என எச்­ச­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பாக பர­வ­லாக புகார்­கள் எழுந்­துள்­ளன.

தற்­போது மாநி­லம் முழு­வ­தும் 16,304 பேர் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர். 69 அரசு ஆய்­வ­கங்­கள் மாதி­ரி­களை பரி­சோ­தனை செய்து வரு­கின்­றன.

சென்­னை­யைத் தவிர 37 மாவட்­டங்­களில் 1,456 பேருக்கு புதி­தாக கிருமி தொற்­றி­யுள்­ளதை அடுத்து அனைத்து மாவட்­டங்­க­ளி­லும் கொரோனா கட்­டுப்­பா­டு­கள் பின்­பற்­று­வதை உறுதி செய்ய வேண்­டும் என மாவட்ட ஆட்­சி­யர்­க­ளி­டம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.