திட்டங்கள் செயல்படுவதை கண்காணிக்க முதல்வர் முடிவு

திட்டங்கள் செயல்படுவதை கண்காணிக்க முதல்வர் முடிவு

1 mins read
7fb83acf-fae4-45b0-a180-17cdd2bcd59b
-

சென்னை: தமி­ழக அரசு அடுத்­த­டுத்து அறி­விக்­கும் திட்­டங்­கள் எது­வும் அறி­விப்­போடு நின்­று­விடாது என்று முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

அனைத்து திட்­டங்­களும் செயல்­ப­டுத்­தப்­ப­டு­வதை தாம் மாதந்­தோ­றும் கண்­கா­ணிக்­கப் போவ­தாக அவர் அரசு நிகழ்ச்சி ஒன்­றில் பேசம்­போது குறிப்­பிட்­டார்.

சட்­டப்­பே­ர­வை­யில் அறி­விக்­கப்­பட்ட திட்­டங்­கள் செப்­டம்­பர் 13ஆம் தேதிக்­குப் பிறகு படிப்­ப­டி­யாக நிறை­வேற்­றப்­படும் என்று குறிப்­பிட்ட அவர், அனைத்­தும் துரித கதி­யில் நிறை­வேற்ற உரிய நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­படும் என்­றார்.

"அமைச்­சர்­க­ளை­யும் அதி­கா­ரி­க­ளை­யும் நானே நேர­டி­யாக கண்­கா­ணிக்க முடிவு செய்­துள்­ளேன். ஒவ்­வொரு திட்­டத்­துக்­கும் முன்­னு­ரிமை அளிக்­கப்­படும். அனைத்து திட்­டங்­க­ளை­யும் நிறை­வேற்­றும் முயற்­சி­யில் நிச்­ச­யம் ஈடு­ப­டு­வேன்," என்­றார் முதல்­வர் மு.க.ஸ்டா­லின்.

அனைத்­துத் துறை­க­ளை­யும் முந்­திக்­கொண்டு அற­நி­லை­யத்­துறை அமைச்­சர் சேகர்­பாபு பல்­வேறு திட்­டங்­களை அறி­வித்­துள்­ள­தா­கக் குறிப்­பிட்ட முதல்­வர், சில திட்­டங்­களை ஒரே வாரத்­தில் அமைச்­சர் சேகர்­பாபு செயல்­பாட்­டுக்­குக் கொண்டு வந்­த­தா­கப் பாராடினார்.

அறநிலையத் துறை சார்பில் அமைச்சர் சேகர் பாபு பல்வேறு நல்ல திட்டங்களைச் செயல்படுத்தி வருவதால் அவரை 'செயல் பாபு' எனக் குறிப்பிடலாம் என முதல்வர் நகைச்சுவையாக குறிப்பிட்டார்.