உணவகத்தில் சாப்பிட்ட பத்து வயது சிறுமி மரணம்

உணவகத்தில் சாப்பிட்ட பத்து வயது சிறுமி மரணம்

1 mins read
3d8b9f5b-2804-42b9-a07b-57c282d0b4ed
-

தி.மலை: உண­வ­கத்­தில் உண­வ­ருந்­திய பத்து வயது சிறுமி உட்­பட 25 பேருக்கு உடல்­ந­லம் பாதிக்­கப்­பட்­டது. இந்­நி­லை­யில், அச்­சி­றுமி சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்­து­விட்­டாள்.

ஆர­ணி­யைச் சேர்ந்த ஆலைத் தொழி­லா­ளி­யான ஆனந்த், தனது மனைவி, பத்து வயது மக­ளான லோஷினி, நான்கு வயது மகன் சரண் ஆகி­யோ­ரு­டன் கடந்த 8ஆம் தேதி அசைவ உண­வ­கம் சென்­றுள்­ளார்.

உண­வ­ருந்­திய பின் வீடு திரும்­பிய நால்­வ­ருக்­கும் உபா­தை­கள் ஏற்­பட, மறு­நாள் மருத்­து­வ­ம­னைக்­குச் சென்­ற­னர். சிகிச்­சைக்­குப்­பின் மற்ற மூவ­ரும் உடல்­ந­லம் தேறிய நிலை­யில், சிறுமி லோஷி­னிக்கு மட்­டும் பாதிப்பு அதி­க­மா­னது.

ஆரணி அரசு மருத்­து­வ­ம­னை­யில் தீவிர சிகிச்சை அளிக்­கப்­பட்­டும், லோஷினி உயி­ரி­ழந்­து­விட்­ட­தாக மருத்­து­வர்­கள் தெரி­வித்­த­னர்.

அதே உண­வ­கத்­தில் உண­வ­ருந்­திய பலர் மருத்­து­வ­ம­னை­களில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அக்­கு­றிப்­பிட்ட உண­வ­கத்தில் உணவு பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டனர். பின்னர் உணவகத்­துக்கு சீல் வைத்தனர். அதி­கா­ரி­கள் இது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.