வாக்குறுதி என்னவாயிற்று? முன்னாள் முதல்வர் கேள்வி

வாக்குறுதி என்னவாயிற்று? முன்னாள் முதல்வர் கேள்வி

1 mins read
b7077176-7f57-4b29-9bb9-a9e26adee032
-

சென்னை: திமு­க­வின் ஆட்சி நடப்­புக்கு வரு­மே­யா­னால் நீட் தேர்வு ரத்து செய்­யப்­படும் என திமுக அளித்த வாக்­கு­றுதி என்­ன­வா­யிற்று? என தமி­ழக அர­சுக்கு எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் அதி­முக இணை ஒருங்­கி­ணைப்­பா­ளரு­மான எடப்­பாடி பழ­னி­சாமி கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.

முன்­னாள் முதல்­வ­ரு­மான பழனி­சாமி தனது டுவிட்­டர் பக்­கத்­தில், "அச்­சம் விலக்கி, நம்­பிக்­கை­யூட்டி நீட்­தேர்­வுக்குத் தயார்­படுத்தி, நன்­ம­திப்­பெண் பெற்று மருத்­து­வ­ராக வேண்­டிய மாண­வன் தனுஷை மர­ணக் குழி­யில் தள்­ளி­யி­ருக்­கும் திமுக அரசே, நீட் தேர்வு ரத்து வாக்­கு­றுதி என்­ன­வா­யிற்று?

"ரக­சி­யம் வைத்­தி­ருப்­ப­தாக சொன்­னீர்­களே, அதை எப்­போது செயல்­ப­டுத்­து­வீர்­கள்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

"மாண­வர்­க­ளுக்கு முறை­யான பயிற்­சி­ய­ளித்து இருந்­தால் 19 வயது மாணவர் தனு­ஷின் உயி ரைக் காப்­பாற்றி இருக்­க­லாம். மாண­வச்­செல்­வங்­கள் இது­போன்ற முடி­வு­களை இனி எடுக்கக் கூடாது என கேட்­டுக்கொள்­கி­றேன்," என்று பதி­விட்­டுள்­ளார்.

நீட் தேர்வு அச்சத்தால் உயிரை விட்டுள்ள சேலம் மாணவர் தனுஷ் மறைவு அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாகத் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், "நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதா இன்று சட்டப் பேரவையில் நிறைவேற்றப்படும்," என அறிவித்துள்ளார்.