பெண்ணின் கடனை அடைத்த நீதிபதி, வழக்கறிஞர்கள்

பெண்ணின் கடனை அடைத்த நீதிபதி, வழக்கறிஞர்கள்

1 mins read
983f0e0d-f39d-4723-8f02-6812fbdd8dab
-

கூட­லூர்: பெண் விவ­சாயி ஒரு­வர் வங்­கி­யில் ரூ.50,000 கடன் வாங்கி­யுள்­ளார். இந்­தக் கடன் தொடர்­பான வழக்கை விசா­ரித்த நீதி­பதியே, பெண்­ணின் நிலையை உணர்ந்து அவ­ரது கடனை அடைத்­தி­ருப்­பது மக்­கள் மத்­தி­யில் நெகிழ்ச்­சியை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

நீல­கிரி மாவட்­டம், கூட­லூர் அரு­கில் உள்ள தர்­ம­கிரி கிரா­மத்­தைச் சேர்ந்­த­வர் ரீனா, 50. விவ­சாயி. கண­வரை இழந்த இவர், வங்­கி­யில் ரூ.50,000 விவ­சா­யக் கடன் வாங்­கி­னார். இவ­ருக்கு அவ­ரது ேதாழி சுமா, 50, பிணை கையெ­ழுத்துப் போட்­டி­ருந்­தார்.

சில தவணை மட்­டுமே பணத்தை திருப்­பிக் கட்டிய நிலை­யில், ரீனா புற்­று­நோ­யால் பாதிக்­கப்­பட்­டார்.

இத­னால் அவ­ரால் வேலைக்­குச் செல்­லவோ, கட­னைத் திருப்பி அடைக்­கவோ முடி­ய­வில்லை.

இந்­நி­லை­யில், கூட­லூர் சார்பு நீதி­மன்­றத்­தில் இந்த வழக்கு விசா­ரணை நடை­பெற்­றது. ஒரே தவ­ணை­யாக ரூ.20,000 செலுத்­தி­னால் கட­னில் இருந்து விடு­விப்­ப­தாக வங்கி அதி­காரி கூறி­னார்.

அவ்­வ­ளவு பணம் தங்­க­ளி­டம் இல்லை என்று பெண்கள் கூறி­னர். அது உண்மைதான் என்பதை நீதி­பதி வெங்­கட சுப்­பி­ர­மணி விசாரித்து தெரிந்து­கொண்­டார்.

மீண்டும் நீதி­ப­தி­ வங்கி நிர்­வாகியிடம் பேச்­சு­வார்த்தை நடத்தி­, ரூ.10,000 செலுத்­தி­னால் போதும் என்று முடிவானது. கடனை நீதி­பதியும் வழக்கறிஞர்களும் சேர்ந்து செலுத்தி ரீனா, சுமாவை வழக்­கில் இருந்து விடு­வித்துள்ளனர்.