சென்னை: தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்தடுத்து பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார். "நாளை செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாளையொட்டி 700 ஆயுள் தண்டனை சிறைக் கைதிகள் விடுதலை செய்யப் பட உள்ளனர்," என அவர் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர், பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிஐ விசாரணையில் உள்ளதாகவும் அதற்கு அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் கூறினார்.

