சென்ைன: தமிழகத்தில் கடந்த ஞாயிறன்று தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமுக்கு வருகையளித்த 28 லட்சத்து 36 ஆயிரம் பேருக்கு ஒரே நாளில் கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இவர்களையும் சேர்த்து மாநிலத்தில் இதுவரை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4.02 கோடியை எட்டி யுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
கொவிட்-19 கிருமிப் பரவலின் மூன்றாம் அலை அச்சத்தைத் தவிர்க்கவும் அன்றாட கிருமித் தாக்கத்தில் இருந்து மக்களைப் பாதுகாக்கவும் மாநிலம் முழுவதும் 40,000 இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
ஞாயிறன்று நடத்தப்பட்ட முகாம்களில் 20 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், ஆகமொத்தமாக 28 லட்சத்து 36 ஆயிரத்து 776 பேருக்குத் தடுப்பூசி போட்டு தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை புதிய சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து, தென்காசி மாவட்டத்தில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசினார்.
"தடுப்பூசி முகாம்களால் எதிர்பார்த்ததை விடவும் அதிகளவில் நல்ல பலன் கிடைத்துள்ளது. இனி, தமிழ்நாட்டில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடைபெறும். அதற்குத் தேவையான தடுப்பூசியை மத்திய அரசிடம் இருந்து கேட்டுப் பெறவும் திட்டமிட்டுள்ேளாம்," என்று அவர் குறிப்பிட்டார்.
ஒரே நாளில் 28 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போட்டிருப்பது இந்தியச் சாதனை! இதுவரை நான்கு கோடி தடுப்பூசி போடப்பட்டு இருப்பது இமாலயச் சாதனை! தடுப்பூசி போடாதவா்கள் போட்டுக் கொள்ளுங்கள்! நம்மையும் காப்போம்; நாட்டையும் காப்போம்!
முதல்வா் மு.க.ஸ்டாலின்

