சென்னை: தமிழகத்தில் காலி யாகவுள்ள இரு மாநிலங்களவை பதவிகளுக்குத் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அக்டோபர் 4ல் இந்தத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறி விப்பில், நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் டாக்டர் கனிமொழி, என்.வி.என். சோமு, கே.ஆர்.என். ராஜேஷ்குமார் அகி யோர் வேட்பாளர்களாக அறிவிக் கப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே காலியாக இருந்த ஒரு மாநிலங்களவை இடத்துக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலை யில், திமுக சாா்பில் போட்டியிட்ட எம்.எம்.அப்துல்லா, மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வானார்.
இதையடுத்து, தமிழகத்தில் இரு மாநிலங்களவை பதவிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. அதிமுக எம்.பி.க்களாக இருந்த வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி ஆகியோரின் பதவி விலகலைத் தொடர்ந்து இந்த இடங்கள் காலியாகியுள்ளன.

