சென்னை: தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரு கட்டங்களாக நடத்தப்பட உள்ளதாக மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அடுத்த அக்டோபர் மாதம் 6, 9 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கி, செப்டம்பர் 22ல் முடிவுபெறும் என்றும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்படும் என்றும் இந்து தமிழ் திசை ஊடகத் தகவல் குறிப்பிட்டுள்ளது.
புதிதாகப் பிரிக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களிலும் தேர்தலை செப்டம்பர் 15க்குள் நடத்தி முடிப்பதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், அண்ைமயில் இத் தேர்தலை நடத்தி முடிக்க இன்னும் கொஞ்சம் கால அவகாசம் வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழகத் தேர்தல் ஆணையம் மனுத்தாக்கல் செய்திருந்தது.
இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தல் குறித்து மாநிலத் தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் செய்தி யாளர்களிடம் கூறுகையில், "ஒன்பது மாவட்டங்களிலும் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 முதல் மாலை 6 மணி வரை நடக்க உள்ளது.
"மாலை 5 முதல் 6 மணி வரை கொரோனா அறிகுறி உள்ளவர்களும் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். வாக்கு எண்ணும் பணி அக்டோபர் 12ல் நடக்க உள்ளது,'' என்றார்.
இதற்கிடையே, "வேட்பு மனுத் தாக்கலுக்கு ஏழு நாட்களை மட்டுமே தேர்தல் ஆணையம் வழங்கி யுள்ளது. இதனால், திமுக, அதிமுக கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கும் தோழமைக் கட்சிகளால் ஒரு நல்ல முடிவை எடுக்கமுடி யாமல் குழப்பத்துக்கு தள்ளப்படும் சூழல் உள்ளது," என அரசியல் கவனிப்பாளர்கள் கருத்து தெரி வித்துள்ளனர்.

