சென்னை: அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது கைேகாத்த அதே கூட்டணி கட்சிகள் இந்த உள்ளாட்சித் தேர்தலிலும் போட்டியிடுமா? அல்லது தனித்துப் போட்டியிடுமா? கூட்டணிக்குள் பிளவு ஏற்பட வாய்ப்புள்ளதா? என்பது குறித்து ஒவ்வொரு கட்சியினரும் மனக் கணக்குகளை கூட்டிக் கழித்துப் போட்டுப் பார்த்து வருகின்றனர்.
திமுகவிடமிருந்து கணிசமான இடங்களைப் பெற்று போட்டியிடவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் 10 முதல் 15% இடங்களில் போட்டியிடவும் விரும்புகிறது காங்கிரஸ்.
ஆனால், திமுக தலைமையோ அனைத்துக் கட்சிகளுக்கும் 15% இடங்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 85% இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், திமுக தரப்பு கொடுக்கும் இடங்களையும் எண்ணிக்கையையும் தோழமைக் கட்சிகள் பெற்றுக்கொள்வதாக இருந்தால் கூட்டணி நீடிக்கும். இல்லை யேல் கூட்டணியில் பிளவு வரலாம் என்கின்றனர் திமுக கூட்டணி கட்சிகளின் மாநில நிர்வாகிகள்.
மற்றொரு பக்கம், தேமுதிகவுக்கு இப்போதுள்ள ஒரே வாய்ப்பு திமுக கூட்டணிதான் என்பதால், தேமுதிக திமுகவுடன் கூட்டணி அமைக்கலாம் எனத் தெரிகிறது.
வன்னியர்கள் வாக்கை முழுவதும் அறுவடை செய்யவேண்டும் என்ற நோக்கில் திமுக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
திமுகவுடன் கூட்டணி அமைத்தால் அதிக இடங்களில் வெற்றி பெறலாம் என்பது பாமகவின் கணிப்பாகவும் உள்ளது.
ஏற்ெகனவே திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றுள்ள நிலையில், ஒருவேளை திமுகவை நோக்கி பாமக வந்தால், தொல். திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வாய்ப்புகள் மிக அதி கம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது திமுகவுக்கு பெரும் இழப்பாக அமைந்துவிடும். ஏனெனில், தலித் வாக்குகளைத் திமுக இழக்க நேரிடலாம்.
மறுபுறம், அதிமுக கூட்டணியில் அதிக அளவில் சலசலப்பு இருக்காது எனவும் தெரிகிறது. ஏனெனில், பாமகவுக்கு அதிக இடங்கள் ஒதுக்க வாய்ப்புள்ளது. அப்படி வழங்காமல் போனால், பாமக திமுகவை நோக்கிச் செல்ல வாய்ப்பு உள்ளது அல்லது தனித்துக்கூட போட்டியிடலாம்.
உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பல மாவட்டங்களிலும் வன்னியர்கள் பெரும்பான்மையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

