சென்னை: கொவிட்-19 கிருமித் தொற்று தடுப்புப் பணியில் ஈடுபடும் தாதியர் சிலர், தங்களுக்கு தங்கு விடுதி வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து திடீர் ேபாராட்டத்தில் ஈடுபட்டனர்.
"எங்களது பணி காரணமாக வாடகை வீடுகள் எங்களுக்கு எளிதில் கிடைப்பதில்லை. சீருடையுடன் வரும் தாதியரைக் கண்டு ரயில்கள், பேருந்துப் பயணிகள் முகம் சுளிக்கும் நிலைமையும் உள்ளது. ஒரு சிலர் எங்கள் அருகில் நிற்க விரும்பாமல் தள்ளிச் சென்று விடுகின்றனர்," என்றும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின் கொரோனா வார்டில் பணியாற்றி வரும் தாதியர், கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து எம்ஆர்பி கொவிட் தாதியர்கள் கூட்டமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் ராஜேஷ் செய்தியாளர் களிடம் பேசினார்.
"கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையின் கொரோனா வார்டுகளில் பணியாற்றுவதற்கு ஒப்பந்த அடிப்படையில் மருத்துவப் பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் பணி அமர்த்தப்பட்டோம்.
"கடந்த டிசம்பர் மாதம் எங்களது பணிக்காலம் முடிவடைந்தது. இருப்பினும், கொரோனா இரண்டா வது அலையின் தாக்கம் தொடர்ந்து நீடித்ததன் காரணமாக எங்களது பணிக்காலம் நீட்டிக்கப்பட்டு பணியாற்றி வருகிறோம்.
"எனினும், எங்களுக்கு வழங்கப்பட்டு வந்த விடுதி வசதிகளை இனி வழங்க முடியாது என மருத்துவ நிர்வாகம் கூறியுள்ளது.
"கொரோனா பணியில் ஈடுபடும் எங்களைப் போன்றவர்களால் வெளியே எங்கும் எளிதில் தங்க முடியவில்லை. எனவே, எங்களது பிரச்சினையில் அரசு உடனடியாகத் தலையிட்டு எங்களுக்கு விடுதி வழங்கவும் தொகுப்பூதியம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்," என்று வலியுறுத்தி உள்ளனர்.